நியோமேக்ஸ் நிலநிதி நிறுவன வழக்கு என்னாச்சு ? UPDATE
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவன வழக்கு என்னாச்சு ? UPDATE
நியோமேக்ஸ் நிலநிதி நிறுவன வழக்கு 21/09/23-க்கு ஒத்தி வைக்கப்பட்டது
நியோமேக்ஸ் ரியல் எஸடேட் நிறுவன வழக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நீதிபதி திரு நாகார்ஜூன் அவர்கள் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது…
நியோமேக்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர், ஓய்வுபெற்ற நீதிபதியின் தலமையிலான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த ஆணையத்திடம் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் சம்பந்தப்பட்ட அனைத்து பத்திரங்களையும் உடனடியாக ஒப்படைக்கத்தயார் என்றும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் பலர் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்கும் போது இடையீட்டு மனுதாரர்களின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டனர்.
நிச்சயமாக அவர்களுடைய ஆலோசனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இப்பொழுது இடையீட்டு மனுதாரர் வழக்கின் திசையை மாற்றவேண்டாம் என்றும் நீதிபதி அவர்கள் குறிப்பிட்டார்…
அரசு தரப்பு வழக்கறிஞர், இன்று STATE Public Prosecutor அவர்கள் வரமுடியாத காரணத்தால் வழக்கு விசாரனையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்…
அதன் அடிப்படையில் வழக்கு விசாரனையை வரும் 21/09/23-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்…
வரும் செப்டம்பர் 21ம் தேதி மாநில அரசு வழக்கறிஞர் ஜின்னா ஆஜர் ஆவார் என்றும் ஏற்கனவே நியோமேக்ஸ் முக்கிய புள்ளிகள் வீரசக்தி, பாலசுப்பிரமணியம் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது ஆஜர் ஆகி அரசு தரப்பில் வாதத்தை எடுத்து வைத்து முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள்.
இதற்கு இடையில் நியோமேக்ஸ் தரப்பில், ஆணையம் அமைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க இசைவு தெரிவித்து உள்ளது என்றும், வழக்கு அடுத்தடுத்து நாட்கள் தொடர்ந்து நடக்கிறது என்று நமக்கு சாதகமாக அமையும் என்று கூட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.