லால்குடி புதிய நீதிமன்றம் எப்போ…?
திருச்சி மாவட்டம் லால்குடியில் இயங்கி வந்த பழமையான நீதிமன்ற கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் அதனை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கில் 2017 ஆம் ஆண்டு தனியார் கட்டிடத்திற்கு மாதம் 1.75 லட்சம் ரூபாய் வாடகை செலவில் மாற்றப்பட்டது….
மூன்று மாடி கொண்ட கட்டிடத்தில் செங்குத்தான குறுகிய நிலையில் கொண்ட ஒரே ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது ….

மூன்று மாடிகளுக்கும் ஏறி இறங்க ஆறு பேர் மட்டுமே செல்லும் அளவிற்கு ஒரு சிறிய வகை லிப்ட் வசதி உள்ளது அதுவும் தற்போது இயங்கவில்லை. இடவசதி மிக மிக குறைவான பகுதியாக கட்டிடம் உள்ளது.
வழக்கறிஞர்களும் காவல்துறையும் வழக்குகளுக்காக நீதிமன்றம் வரும் மக்களும் இடிபாடுகளுக்கு சிக்குவதும் – கால்கடுக்க நிற்பதுமே இங்கு தினந்தோறும் தொடர்கிறது ….

லால்குடிக்கு புதிய பேருந்து நிலையத்தை அறிவித்து அடிக்கல் நாட்டிய வேகத்தில் புதிய பேருந்து நிலையத்தை திறக்கும் அளவிற்கு பணிகள் வேகமாக செய்து வரும் அரசின் செயல் பாராட்டுக்குறியது…
அதே சமயம் வழக்குகளுக்காக தினம்தோறும் நீதிமன்றத்திற்கு செல்லும் வழக்கறிஞர்கள், காவல்துறையினர் மற்றும் மக்களுக்கு ஏதுவாக புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவது எப்போது என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு வழக்கறிஞர்கள் போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்கள்…
— சதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.