அங்குசம் சேனலில் இணைய

பரசுராமர் அவதாரம் – ஆன்மிக பயணம்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெருமாளின் அவதாரங்களில் இது ஆறாவது அவதாரம் ஆகும். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்திய அவதாரம் இது. இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார் பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன் அவனை பிரம்மா, பிராமணர்கள், நளவிதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதி ராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்யவதி என்ற பெண் பிறந்தாள். அந்த பெண்ணை பிருகு புத்திரரான ரிஷிகன் என்ற பிராமணன் தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான்.

பரசுராம அவதாரம் வரலாறு:

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன் எப்படியாவது அவனை தட்டிக் கழிக்க ஒரு உபாயம் செய்தான். அவன் ரிஷிகளை பார்த்து பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளை கனிகா தானமாக தர முடியுமா? என்று வினா? என்ன திரவியம் கேட்கிறீர் சொல்லும் என்றான் ரிஷிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும் அந்த குதிரைகளில் ஒன்று பச்சை பசேல் என்று இருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும் இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியை கன்னிகா தானம் செய்கிறேன் என்றான் காதி ராஜன். ரிஷிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக் கொண்டு வந்து நிறுத்தினான். இதை கண்டதும் காதிராஜன் ஆகா! நான் எது சாத்தியமாகாது என்று நினைத்து சொன்னேனோ அதனையே இவன் எளிதாக செய்து முடித்து விட்டான். இனியும் இவனை பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தண சீற்ற சாபங்களுக்கு இலக்காக நேரிடும் என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்கு திருமணம் செய்து தந்தான்.

இறைவன் பரசுராமன் | சிப்ளூன்கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை வேண்டும் என்று ஆசை வந்தது. அதேசமயம் சத்தியவதியின் தாய் காதி ராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால், தனக்கு பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாக பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞான குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடனம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாஹனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாக சொல்ல சத்தியவதியை உண்ணும் படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்ன கவளைகளை அளித்துவிட்டு ரிஷிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாக பிள்ளை பிறப்பான் என்றும் தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க சத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் ரிஷிகனுக்கு பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சத்தியவதி பின்னர் தன் வாழ்க்கையை துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணுகா என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பசுமணன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி பையனாக பிறந்தார். அவன் பரந்தாமன் உடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தை இருபத்தொரு சத்ரிய பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து பரசு என்ற கோடாரியை பெற்ற காரணத்தால் இவனுக்கு பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய், தந்தையாரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகா தேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்கு சென்று அங்கே மண்ணை கையில் எடுத்து பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும் என்பாள். அது குடமாக மாறும். பின்பு, அதில் தண்ணீர் கொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கையான ஒன்று. இப்படி கொண்டு வந்த தண்ணீரை தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

இழந்ததை மீட்டுத்தரும் கார்த்த வீர்யார்ஜூனர் | Kartha Veeryarjuna will restore the lostசூரிய குலத்திலே கேசய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவருக்கும் சுணத்தை என்பவளுக்கும் கார்த்த வீரியன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும்போது கைகள் கிடையாது அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குழந்தை குறை நீங்க கார்த்தவீர் யாச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாதிரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர் . அத்திரப் பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாக பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே, ஸ்ரீ ஹரி அம்சமாக தத்தாதிரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கி தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அது மட்டுமல்ல அவனை கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் குந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோக ஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாதிரையரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றை போல எங்கும் தடையின்றி திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான்.

ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரிப்போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக ராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீர்யார்ச்சுனன் தான் அணைப்போல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்தது தான் அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்கு போனான். கார்த்தவீரியனும் இராவணனை தோற்கடித்து தன் பட்டனமான மாகீஸ் மதிக்கு கொண்டு சென்று சிறை வைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை வேண்டிக்கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தய வீரன். வேட்டையை முடித்து வீடு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களை கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார் மற்றும் பல சௌகரியங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. முனிவர் ஆஸ்ரமத்தில் நின்று தேவ பசுவாகிய காமதேனுவால் தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படி கேட்காமல் முனிவரும் அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதை தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை காத்த வீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர் தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.

பரசுராமர் அவதாரம் - விஷ்ணுவின் 6வது அவதாரம் | ர்க்யான்இதை கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்த வீரியன் பட்டணமான மாஹிஷ் மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்த வீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் 500 வில் ஏந்தி பான கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு, காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்த்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதை கேட்டு அவர் மிகவும் வருந்தினார். ராமா காரணம் இல்லாமல் ஓர் அரசனை கொன்று விட்டாயே! அரசனை கொல்வது ஓர் அந்தணனை வதம் செய்வதை விட கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தர்மம்.

மேலும், நாம் பொறுமையை கடைப்பிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயிசிதமாக தீர்த்த யாத்திரைக்கு போய் பல புண்ணிய சேஷ்த்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஒரு ஆண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு, ஓர் நாள் நீர் நிலைக்கு சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவ புருஷன் உருவம் நீரில் நிழலிடுவதை கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தால் கற்பின் நிறைக்கு களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண் குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்கு தண்ணீர் கொண்டு வர சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயை கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப பரசுராமன் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினான். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லை காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டுப் பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்! என்றார்.

பரசுராமர் பகவான் அம்சம் ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே, இறந்த என் தாயும் என் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும் அதோடு நான் அவர்களை கொன்றேன் என்ற நினைப்பின் நிழல் கூட அவர்களுக்கு தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த் தெழுந்ததை முன்னிட்டு ரேணுகா தேவியே தான் மாரியம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோவில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதாரமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்மதக்கினி முனி ஆனார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழ்ச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடம் பரசுராமரிடம் பகைமை பாராட்டி வந்தனர். அதனால் பழிக்கு பழி வாங்க தீர்மானித்தார்கள்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Parshuram Jayanti 2019,தாயின் தலையை வெட்டிய பரசுராமர்... அடுத்து அவர் கேட்ட வரம் என்ன தெரியுமா...! - parasuraman mythology story: parasuram rescue ravana from kartavirya arjuna - Samayam Tamilஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தார். ரேணுகாதேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது, கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும்போது ரேணுகாதேவி சிரசு வெடிக்கும் படி கதறினாள். அரச குமாரர்களே!அவர் ஓர் அந்தண சிரேஷ்ட மகா முனிவர் தயவுசெய்து அவரை வெட்டி வீண் பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப் பகை கொண்ட அந்த ராஜன்மார்கள் அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வால் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது தரும தேவதைகளையும் தலைமுழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலை கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார் அவரது நாடி நரம்புகள் துடித்தன.

அப்பொழுதே இந்த கொடிய சத்ரிய பூண்டை அடியோடு அழிப்பேன் என்று சபதம் எடுத்தார். பரசுராமர் மாஹிஷ் மதி நகருக்கு விரைந்தார். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாக குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு சேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்கு பதிலாக ரத்த ஆறு நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையை கொண்டு வந்து உடலுடன் சேர்த்தார். ஈம சடங்கினை செய்தார். பூமியில் உள்ள சத்திரிய வம்சம் அற்றுப்போகும் படி 21 திக்விஜயம் செய்து வேர் அறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்கு திசையை அத்து வரியவுக்கும் வடக்கை உதகாதாவுக்கும் மத்திய தேசத்தை ஆசியப்பறுக்கும் சூரிய வர்த்தத்தை உபதிரஷ்பிவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத்த ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர் ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார்.

Parshuram Jayanti 2019,தாயின் தலையை வெட்டிய பரசுராமர்... அடுத்து அவர் கேட்ட வரம் என்ன தெரியுமா...! - parasuraman mythology story: parasuram rescue ravana from kartavirya arjuna - Samayam Tamilதற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில் சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமந் பாகவதம் சொல்கிறது. ராம அவதாரத்திற்கு முன்பு சூரிய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜ வம்சம் இல்லாமல் அழித்து விட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனை சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரி வசன் என்றும் அழைப்பர். சத்ரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தலைக்க செய்தவன் மூலகனே! மூலகனுக்கு பின்னர் தசரதன், அளப்படி, கட்டுவாள், கண் தீர்க்கப்பாடு ரகு அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித்தான் சத்ரிய வம்சம் மீண்டும் தலைக்க ஆரம்பித்தது.

ராம அவதாரத்தில் பரசுராமர்:

ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்கு போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவ வலிமை முழுவதையும் ராம பானத்திற்கு இறையாக்கிவிட்டு தாம் பிராமணர் என்ற நிலையில் எண்ணிய பொருள் எல்லாம் இனிது என்று ராமருக்கு ஆசீர்வாதம் செய்கிறார். இலங்கையில் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுப்படுத்தி இராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்தானே! கார்த்த விரியாச்சுடனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது 20 தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனை பரசுராமர் கொன்றார் .அதே பரசுராமர் என் பார்த்தாவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீராகிய எனது கணவருடைய வீரம் புகழ் பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே! மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய் ஜாக்கிரதை! என்றால் சீதாதேவி.

மகா பாரதத்தில் பரசுராமர்:

காசி ராஜாவிற்கு அம்பை, அம்பிகை , அம்பாளிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார் இந்த மூன்று பேர் களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை அம்பாளிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார். அம்பிகையோ பீஷ்மர் உடைய தம்பியை திருமணம் செய்ய மறுத்து விட்டாள். தான் சாலுப மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளை சாலுவனிடம் அனுப்பினார். ஆனால், அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடம் இருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தால் சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம் வரத்தின் போது என்னை கவர்ந்து வந்த நீர் தான் என்னை திருமணம் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள்.

பீஷ்மரோ! தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் மேற்கொண்டிருப்பதால் தான் அவளை மனம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும் அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, என்னை அவர் சம்பிரதாயமாக கல்யாணம் செய்வது தான் சத்ரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரை சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்தி பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்கிறார். பீஷ்மர் நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய விரதத்தை மீறி நரகத்திற்கு போவதற்கான உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார்.

Parashuram and Karna: Guru's Curse and the Warrior's Destinyமகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார். பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் சத்ரியர்களை கண்டாலே அவருக்கு பிடிக்காதே ஒரு நாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அது சமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையை துளைத்துக் கொண்டு சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை அவன் தொடையில் ரத்தம் கசிந்து பெருகி கொண்டே இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுகடியை வலி தாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக்கொண்டு இருந்தேன். நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்க முடியாது உண்மையில் நீ ஒரு சத்திரியன் தானே! உண்மையை கூறி விடு என்று அதட்டி கேட்டார் பரசுராமர்.

கர்ணன் தான் ஒரு சத்திரியன் என்பதை ஒப்புக்கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்கான சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையை கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்கு தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது என்று சபித்தார். அந்த சாபத்தை குரு சேத்திர களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்ல உதவாமல் மமுவாளி உரை செய்த சாபத்தை உற உண்ணினாள் என்று இயம்புகிறார்.

 

—    பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.