புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

7-6-25 புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில்  காவல் கண்காணிப்பாளர் திரு Dr.S.  பாஸ்கரன்  PPS  தலைமை வகித்தார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் திரு. தியாகராஜன், கீர்த்தி மற்றும் இதர காவலர்கள் கலந்து கொண்டனர்.  35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.  அதற்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்ற பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்களிடம் மேற்கூறிய புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட்டார்.

Srirangam MLA palaniyandi birthday

மேலும் பொதுமக்கள் தவறவிட்ட 18 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன்  மதிப்பு 2,10,000 ஆகும்.

புதுச்சேரி காவல் நிலைய மக்கள் மன்றம்மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

*போலியான உடனடி கடன் செயலி மூலம் நீங்கள் கடன் பெற்றால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்களை மிரட்டி அதிக பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறுவார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

*சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம் அவர்கள் அனைவரும் இணைய வழி மோசடிக்காரர்கள்.

*  மும்பை போலீஸ், CBI, TRAI இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். இது இணைய வழி மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சி ஆகையால் இதுபோன்று அழைப்புகள் வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும்.

* ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு flipkart, amazon, meesho போன்ற அங்கீகரிக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் பொருட்களை வாங்க வேண்டும். விலை குறைவாக கிடைக்கின்றது என்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், youtube போன்ற இணையதளங்களில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

புதுச்சேரி காவல் நிலைய மக்கள் மன்றம் என்று மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர்  இணைய வழியில் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தமான விழிப்புணர்வும் மற்றும் அறிவுரையும் கூறினார்.

மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலைய இலவச தொலைபேசி எண் 1930, இணையதளம்: cybercrime.gov.in, லேண்ட்லைன்: 04132276144/9489205246 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.