தேனி – இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டை கட்டித்தர மாவட்ட ஆட்சியாிடம் கோரிக்கை மனு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம், போடி தாலுகா, நாகலாபுரம் ஊராட்சி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (லேட்) கல்யாணி (60), இவருடைய வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதால்,  அரசு வீடு கட்டு திட்டத்தின்  கீழ் புதிதாக வீட்டை கட்ட உதவி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை  விடுத்துள்ளார்.

நாகலாபுரம் ஊராட்சியில் உள்ள  கல்யாணி என்பவா் தனது இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் மகள் ஜானகி, மகன் கருப்பசாமி மருமகள் செல்வி பேத்தி பவித்ரா, மற்றும் மாற்றுத்திறனாளி மகன் தர்மராஜ் உள்ளிட்ட ஆறு பேர் வசித்து  வருகின்றனர்.

Frontline hospital Trichy

தற்பொழுது மழைக்காலம் என்பதால்  வீடு மேலும் சேதம் அடைந்து வீட்டில் தண்ணீர் அருவி போல் கொட்டி வீடு முழுவதும் தண்ணீா் தேங்கியுள்ளதால்,  வீட்டில் வசிக்க முடியாத  நிலை நீடித்து வருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும், வீடு எந்த நேரத்தில் இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படும் என்ற அச்சத்துடன் இருந்து வருவதால், அரசு வீடு கட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டுமென கல்யாணி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

 

— ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.