அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குளம் மறு சீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விழா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சக்தி ரோட்டரி சங்கம்  மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் மணிகண்டம் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம்  மறு சீரமைப்பு  செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும்  விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தொடக்க விழாவில் இத்திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இத்திட்ட தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

குளம் மறு சீரமைப்பு இவ்விழாவிற்கு ரோட்டேரியன் மாவட்ட அளுநர் ரொடடேரின் ராஜா கோவிந்த சாமி மற்றும் ரொட்டேரியன் ஷாஷி போம்ரா ஆகியோர் தலைமை வகித்தார்கள் மணிகண்டம் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்  அகஸ்டின் இம்மானுவேல் தேவநேசன் மற்றம் முன்னாள் மணிகண்ட ஒன்றிய பெருந்தலைவர்  கமலம் கருப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  பாரதிதாசன் முன்னாள் துணைத் தலைவர் ரத்தினம் கிராம நிர்வாக அலுவலர் நவின் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

ரோட்டரி சங்கம் மாவட்ட செயலர் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆர் ஐ டி 3000 ரொட்டெரியன் ஜெயந்த் மைக்கேல் ஜூடி சிறப்பு விருந்தினராகவும் மற்றும் திருச்சி மாவட்டம் சக்தி ரோட்டரி சங்கத்தின் சபீனா சம்பத் நிஷா அமுதா சுபாஷினி  செயின்ட் ஜோசப் பணிமனைகளின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கில் சே ச ஆகியோர் வாழ்த்துரை வழங்கி குளத்தை கிராம மக்களுக்கு அர்பணித்து வைத்தனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

குளம் மறு சீரமைப்பு கல்லூரியின் செயலர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே ச முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சேச விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சேச அவர்களின்  ஆலோசனைப்படியும் வழிகாட்டுதலின்படியும் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர்  லெனின் திட்டத்தின்  பயனையும் அதன் செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் எடுத்துக் கூறி வந்தவர்களை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பாக  இளநிலை பொறியாளர் ஜோதி மாத்தூர் ஊராட்சி மன்ற செயலர் பிரான்சிஸ் ரோடேரியன்களான  சசிகலா சூசன் செரியன்   மற்றும் மாத்தூர் கிராம மக்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

குளம் மறு சீரமைப்பு 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை சுத்தம் செய்து அதில் ஏழு ஏக்கர் மட்டும் குளம் தூர் வாரப்பட்டு எடுக்கப்பட்ட மணல் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிரவப்பட்டது மழைக்காலங்களில்  பள்ளி வளாகத்தில் மழைநீரால்  ஏற்படும் பாதிப்பை தடுக்கவும் மழை நீரானது உள்ளே வராமல் தடுக்கவும் மேட்டு இடமாக்கி சுற்றிலும் கரை அமைத்து இக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன இக்குளம் சீரமைக்கப்பட்டதன் வழியாக கிராமத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் நீர் மட்டம் உயரும் மேலும் 25 முதல் 30 ஏக்கர் விவசாய நிலங்கள் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் மழைகாலங்களில் சுமார் ஐந்து லட்சம் கன அடிக்கு மேல் நீர் சேமிக்க முடியும் மேலும் ஆயிரம் சதுர அடியில் 250 மரக்கன்றுகளை கொண்டு சிறுக்குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது.

குளம் மறு சீரமைப்பு இத்திட்டத்திற்கு சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவாக்கத்துறையின் முது நிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேலும் இத்திட்டம் நீர்வளப் பாதுகாப்பும் நீர் மேலாண்மைக்கும் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் பயன்பட உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.