பத்து நாளா சர்வர் பிரச்சினை – என்னதான் ஆச்சு அஞ்சல் துறைக்கு ?
பதிவு தபால் சேவையை ரத்து செய்யப்போவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது, அஞ்சல் துறை. கால மாற்றத்திற்கேற்ப, அன்றைய பதிவு தபால் செய்து வந்த பணியை இப்போது ஸ்பீடு போஸ்ட் எனப்படும் விரைவுத்தபால் சேவை பூர்த்தி செய்யப்போகிறது என ஆறுதல் அடைந்தோம். தபால் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் வசதியும் இதில் கூடுதலாக இருக்கிறது என திருப்தியடைந்தோம்.
அதற்குள்ளாக, அடுத்த சிக்கலை சந்தித்திருக்கிறது, அஞ்சல் துறை. தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சல் துறைகளில் கடந்த 10 நாட்களாக சரிவர பார்சல் டெலிவரி செய்யவில்லை எனவும் மணி ஆர்டர், டெலிகிராம், ஸ்பீடு போஸ்ட், இறந்த செய்தி, பிறந்த செய்தி என எல்லாம் ஜூலை மாத கடைசியில் இருந்து தற்போது வரை எதுவும் போய்ச்சேரவில்லை என புலம்புகிறார்கள்.
அஞ்சல் துறையில் விசாரித்த போது, தனியார் நிறுவனத்தை சார்ந்து சாப்ட்வேர் பயன்பாட்டில் இருந்து வந்ததாகவும்; தற்போது அஞ்சல் துறைக்கு என்றேவதமிழக அரசு புதிதாக ஒரு சாப்ட்வேர் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்; இது சோதனை முயற்சியில் இருப்பதால் இந்த சிக்கல் என்பதாகவும் சொல்கிறார்கள்.
சர்வர் பிரச்சினை பத்து நாளா இருக்கிறது உண்மைதான். படிப்படியாக சரி செய்து வருகிறோம். கூடிய விரைவில் சரியாகிவிடும் என்கிறார்கள்.
அட, என்னப்பா, இது அஞ்சல் துறைக்கு வந்த சோதனை?
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.