மதுரையில் பெய்யும் பரிசு மழை !
தமிழகம் தேர்தல் திருவிழாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் பெய்யும் பரிசு மழையில் நனைந்து திக்குமுக்காடி கிடக்கிறார்கள் வாக்காளர்கள்.
சிம்மக்கல், கூடல்நகர், செல்லூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு நகல்களை திமுக – அதிமுக கட்சி வேறுபாடின்றி போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்கிறார்கள். திடீரென்று ஒரு விழாவை நடத்தி, ஹாட்பாக்ஸ், வேட்டி, சேலை, சில்வர் சம்மடம், நாற்காலி என தேர்தல் சீர்வரிசை பொருட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்த போட்டியில் திமுகவின் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதிக்கும், அதிமுகவில் வாய்ப்பு கேட்டு காத்திருக்கும் மருத்துவர் சரவணனுக்கும் பெரிய ரேஸே நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். மூன்று வேளைக்கு வெறும் 10 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் டாக்டர் சரவணன், “ஒருவனுக்கு எவ்வளவு பொருளை கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டான். ஆனால், வயிராற உணவை கொடுத்தால் மட்டுமே அவன் போதும் என்ற மனநிறைவுக்கு வருவான்” என்று தத்துவம் பேசுகிறாராம் மருத்துவர் சரவணன்.
ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.