இராம அவதாரத்தின் சிரப்பான வரலாறு – ஆன்மீக பயணம்
ராம அவதாரம் பெருமாளின் ஏழாவது அவதாரம் ஆகும்! ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏக பத்தினி விரதனாக சீதா தேவியை மணந்தும் அரக்கன் ராவணனை சம்காரம் செய்தும் தன் தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியதும் ராம அவதாரத்தின் சிறப்பம்சமாகும். வைகுண்டத்தின் வாயில் காப்போராக இருந்த கய விஜயர்கள் சனக்காதியரால் சபிக்கப்பட்ட முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரன்யாசனராகவும், இரணியகசிபுவாகவும் தோன்றினார்கள். இரணியாசுரனை வராக அவதாரம் எடுத்தும் இரணியகசிபுவை சிங்க அவதாரம் எடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். இரண்டாவது பிறவியில் இராவணனும் கும்பகர்ணனும் ஆக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன் தந்தவர்தன் என்பது மூன்றாவது பிறப்பு.

இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து மீண்டும் திரும்பினார்கள். சூரிய குல வம்சவழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன் இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அயோத்தியை ஆண்டு வந்தான் தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுபத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந் நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாகிவிட்டது. தேவர்களிடமும் தங்கள் அட்டூழியங்களை செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களை துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே, ஸ்ரீமத் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையும் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார். விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன் லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும் படி தசரதனிடம் கேட்டனர். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான்.
அவர்களை வேள்வி செய்ய இருக்கும் காட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவளை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமையில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள் ராமன் அரக்கர்களை அழித்தார். மாரிசனை ராம பானத்தால் சமுத்திரத்திலேயே கொண்டு போய் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அனேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும்போது கல்லாக சபிக்கப்பட்டு கிடந்த அகலகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்று மீண்டும் மானிட வடிவம் பெற்றாள். பின்னர் அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஜனகப் புத்திரியான சீதைக்கு உரிய கணவனை தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது.

அந்த சுயம்வரம் மண்டபத்தில் ஒரு சிவ தனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நானேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்த பாக்கியசாலி வளைத்து நான் ஏற்றுகிறானோ அவனுக்கு தன் பெண்ணை தருவதாக அறிவித்திருந்தான் ஜனகன். பல நாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவ தனுசு முறியவில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நான் ஏற்றி காட்டவே சீதா தேவியை ஜனகன் ராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து தம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனை பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து பரசுராமரின் அகந்தையை அடக்கினார். நாடு திரும்பிய ஒரு சில நாட்கள் கழித்து தசரதன் தன் மகன் ராமனுக்கு பட்டம் சூட்ட நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளை செய்தான். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷ முற்றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தாரை என்ற வேலைக்காரி கைகேயிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள்.
இராமன் பட்டதரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை? மேலும், ஜனகர் புத்திரி சீதை தான் பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேசய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள். எனவே, தசரதர் கைகேயைக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களை பயன்படுத்தி ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும். மற்றொரு வரத்தால் ராமன் ஈரேழு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும் தசரதனை கேட்குமாறு மந்திரை சொல்லிக் கொடுத்தாள். மந்திரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களை தற்போதே தர வேண்டும் என கைகேயி கேட்டாள். மன்னர் ராமன் மீது கொண்ட பிள்ளை பாசம் அளவிட முடியாது. கையை கூட அப்படித்தான் இருந்தாள்.

ஆனால், தற்போது இவ்வாறு மாறிவிட்டாளே என வருந்தினார். தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறுத்து விட்டாள். தந்தையின் நிலைக்கண்டு அவர் வாக்கை நிறைவேற்ற சித்தமானார் ராமர். பரதனுக்கு ஆட்சியை அழித்துவிட்டு ராமன் காட்டிற்கு போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள். தன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத் துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கை கரையில் குகன் என்ற வேடன் நட்பு கொண்டான். அவன் உதவியால் கங்கையை கடந்து பரத்வாஜ் முனிவர் ஆஸ்ரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரக்கூடம் சென்று அங்கு பரணசாலையை அமைத்து கொண்டான். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள். இந்நிகழ்ச்சிகள் நடக்கும் போது பரதன் தன் தாய் வழிபாட்டன் நாடாகிய கேசய நாட்டிற்கு போயிருந்தான்.

அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னை பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை எண்ணி மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்து விட்டான். அத்துடன் வனத்திற்கு சென்று சகோதரர்களை அழைத்து வரப் போனான். சித்திரக்கூடம் சென்றான் தந்தையின் மரணச் செய்தி சொன்னான். சொல்லிவிட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன் தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால், ராமன் மறுத்துவிட்டார். பின்பு அங்கேயே மிகவும் துயரூற்ற ராமனும் சகோதரரும் தந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்தனர். பரதனிடம் ராமன் பரதா! உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல தந்தையின் வாக்கு பொய்யாகிவிடும்.
நானும் என் வாக்குறுதியை நிறைவேற்ற தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தை பேணுவதில் அக்கறை செலுத்து என்றான். அண்ணா! அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதி நிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காக தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்கு தந்தருள வேண்டும் என்று பிராத்தித்தான். ராமன் பாதுகைகளை கொடுத்தான். அவற்றை தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன் அயோத்திக்கு போகவில்லை. ராமன் இன்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டு இருப்பதால் நந்தி கிராமம் என்ற இடத்திற்கு சென்றான். ராமனுடைய பாதகைகளை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான். ஸ்ரீ ராமன் லட்சுமணன் சீதை அத்திரி முனிவர் ஆசிரமம் சென்றனர். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான். அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான் அவனை அழித்துவிட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றான். அவர் வில்லும் ஆஸ்திரங்களும் கொடுத்து உதவினர். அங்கிருந்து கோதாவரி நதி தீர்த்தத்திற்கு போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவை சந்தித்தான். அவரோடு அழாவளவிய பின்னர் பஞ்சவடி வந்தனர். பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர்.

அந்த காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். அங்கே ஒரு நாள் ராவணன் என்ற லிங்கேஸ்வரனுடைய தங்கை சூர்பநகை என்பவளை காண நேர்ந்தது. அவள் ராமருடைய அழகை கண்டு மயங்கினாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்று முடிவுக்கு வந்தாள் சூர்பநகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது. அதனால் அவன் அவளுடைய காது, மூக்கையும் அறுத்து அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். சூர்பநகை உடனே இலங்கைக்கு ஓடினாள். இராவணன் ஆகிய தன் சகோதரரிடம் கரதூஷணாதியர் ராமனால் வதம் செய்யப்பட்டதும் தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். மேலும் ராமன் மனைவி பேரழகி அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும் படி சொன்னாள்.
இதை கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான். மாய வேலை செய்வதில் அதிசாரூரியமான மாரிசன் என்ற அரக்கனை பொன் மான் உருக்கொண்டு பஞ்சவடிவில் திரிய சொன்னான். அப்படி மாறி மானாக திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரிசன் பொன்மானாக மாறி ராமன் சீதை உள்ள பரணசாலை பக்கம் நடமாடினான். பொன்மானை கண்ட சீதை அதை தனக்கு பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள். லட்சுமணன் அது உண்மையான மான் அல்ல உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான் என்றான். சீதை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பரண சாலையில் லட்சுமணனை காவலாக இருக்கும்படி சொல்லிவிட்டு மானை துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமர் இடம் அகப்படாத மான் அவனை வெகு தூரம் இழுத்துச் சென்றது.
அலைச்சலில் சினந்த ராமன் ஓர் அம்பு விட்டு அழகியமானை கொன்றார். மாரிசன் உயிர் விடும்போது ராமனுடைய குரலை போன்று மாற்றி கொண்டு ஸ்ரீ லட்சுமணா! ஹே சீதா! என்று அலறியப்படியே! உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்த குரல் கேட்டது. அவள் அதனால் பதட்டமாக லக்ஷ்மணா! உன் அண்ணனுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்றாள். தேவி! இது அந்த மாயமானுடைய குரல் என் சகோதரரை வெல்பவர் பூமியில் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம் என்றான் லட்சுமணன். உடனே சீதை கோபமாக லக்ஷ்மணனை நான் சொல்வதை கேள் உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார் என ஆவேசமாக கூறினாள். சீதையை பர்ணசாலையில் தனியே விட்டு தன் அண்ணனை தேடிச் சென்றான் லட்சுமணன். அந்த சமயம் ஓர் அந்நியாசியாய் வர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான் ராவணன்.

சீதை பிச்சை போட வந்தாள். அப்படியே அவளை கவர்ந்து கொண்டு விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். மாரிசனை கொன்ற ராமன் வர்ணசாலைக்கு திரும்பினான். அங்கு வரும் வழியில் லட்சுமணன் தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும்படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னார். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள். அங்கு சீதை இல்லாததை கண்டு கலக்க முற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது சீதையை கடத்தி சென்ற ராவணனை ஜடாயு என்பவன் தடுத்து நிறுத்த போராடினான் அப்போது ராவணன் ஜடாயுவை தாக்கினான். ஜடாயு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர். இராவணன் சீதையை கடத்தி சென்றதை அறிவித்துவிட்டு உயிர் நீதான் ஜடாயு. ஜடாயுவிற்கு ஈமச் சடங்குகளை எல்லாம் செய்துவிட்டு ராமனும் லக்ஷ்மணனும் கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாக திகழ்ந்தான். அவனை அவர்கள் வதம் செய்ய சாப விமோசனம் பெற்றான்.
அவன் உடல் தேஜோ மயமாக திகழ்ந்தது. அந்த ஒளி மிகுந்த உடலுடன் வணங்கி வலம் வந்து அவர்களை சபரியிடம் போகுமாறு வேண்டினான். அவர்கள் சபரி இடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிறத்தையோடும் அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்கு பழ வகைகளை கொடுக்கும் முன்பு தான் கடித்து சுவை பார்த்து விட்டே அவருக்கு கொடுத்தாள். அதை கண்டு பூரிப்பும் ஆனந்தமும் அடைந்தான் ராமன். அவள் கடித்துக் கொடுத்த பழங்களை விரும்பி சாப்பிட்டான். அவள் அவர்கள் இருவரையும் மதங்க மலைக்கு போக அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அனுமன் சுக்ரீவன் முதலியோர் சீதையை மீட்க பெரிதும் உதவுவார்கள் என்று சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து மதங்க மலைக்கு புறப்பட்டார். சுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான்.
கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரரான சுக்ரீவன் அவனை அவன் அண்ணன் நாட்டை விட்டு துரத்தியதால் அவனுக்கு பயந்து மதங்கமலையில் ஒளிந்து இருந்தான். ராம, லட்சுமனை மலை சாரலில் பார்த்ததும் அவர்கள் தன் அண்ணன் வாலியால் அனுப்பப்பட்டு தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே, அவர்களை யார் என தெரிந்து வரும்படி அனுமனை அனுப்பினான். அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்பு கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் ராம, லக்ஷ்மணனை அழைத்து சென்றான். சுக்ரீவன் விவரம் அறிந்ததும் அவனுடைய துயரம் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். காரணம் வாலியை யாராலும் கொல்ல முடியாது வரம் பெற்றவன். அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய்விடும் அப்படிப்பட்டவனை தெய்வம் தான் வெல்ல முடியுமே! தவிர ஒரு மனிதன் நிச்சயம் ஆக கொல்ல முடியாது என்ற நம்பிக்கை வலுத்து இருந்ததே காரணம்.

பின்னர் வாலியை யுத்தத்திற்கு வரும்படி சுக்ரீவனை அனுப்பினார் வாலி வந்தான். சுக்ரீவன் உடன் போரிட்டான். அப்படி இருவரும் போரிடும் போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். சுக்ரீவனை கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான். அதன் பின் சீதையைத் தேடி பல பாகங்களுக்கும் வானர படைகளை அனுப்புவதாக சொன்னான். சுக்ரீவன் அப்போது மழைக்காலமாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் வாக்குறுதியை மறந்தே போனான். ராமன் லட்சுமணனை அவனிடம் அனுப்பி மதி மயங்கி கிடந்த சுக்ரீவனை பார்த்து வாலியை கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்கான அஸ்திரங்கள் இருக்கின்றன. அதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும் தன் தவறை உணர்ந்தான் சுக்ரீவன். அதன் பின் மன்னிப்பு வேண்டிக் கொண்டான். அதன் பின் நாளா புறமும் வானரப் படைகளை அனுப்பினார். அப்படி சென்ற படைகளில் தெற்கே அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள்.
சீதாப்பிராட்டியை பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்கு கிடைத்தது தங்களுக்கு அது மாதிரி பாக்கியம் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரியவந்தது. ராம, லட்சுமணன் துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற செய்தியை சொன்னான். அனுமனை அனுப்பி கடல் தாண்டி ராவணன் அவனை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும்படி கூறினான். பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீத்தையை நெடுகத் தேடினான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா ஸ்ரீராமரை நினைத்து அழுது கொண்டிருந்தாள். இதை கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளை சுற்றி காவல் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது சீதா தேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்துக் கூறினான். தங்களை தான் நான் தேடி வந்துள்ளேன்.
அதற்கு அடையாளமா ராமர் கொடுத்து அனுப்பிய கணையாளியை கொடுத்து வணங்கினார். அதை தன் கையில் வாங்கி கண்களில் ஒத்திக் கொண்டாள் சீதா. சீதா தன்னிடம் இருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி பிரபுவை தயவுசெய்து சீக்கிரம் வந்து என்னை சிறை மீட்க சொல்வாயாக! என்று வேண்டிக் கொண்டாள். அவளைப் பார்த்துவிட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை. ராவணன் கோட்டைக்கும் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என நினைத்து ராவணனுடைய அசோக வனத்தை அழிக்கும் வேளையில் இறங்கினான். இந்த செய்தி இராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும் தன் மகன் இந்திரஜித்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் அவர்களை ஒரு சில கணப் பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித் நேரில் புறப்பட்டு அசோக வனத்திற்கு வந்தான்.
அவன் தன்னுடைய பிரம்மாஸ் திரத்தால் அனுமனை கட்டி இழுத்து ராவணன் அவையில் நிறுத்தினான். ராவணன் அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே! நீ யார் என்று வினவினான்? என் பெயர் அனுமன் நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீ ராமனுடைய தூதன் அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு மேலும் ராவணனிடம் ராவணா! நீ புத்தி கெட்டுப் போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை பெருமாளிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்கு திருவருளை தருவார் என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனை கொன்று விடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான். ராவணன் தம்பி விபீஷணனை உடனே லங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று கூறி அனுமன் வாலில் தீ வைத்தனர். அனுமன் தன் வாலில் எறிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்துவிட்டு மகேந்திர மலைக்கு திரும்பினான். அங்கிருந்து எல்லோரும் ஆக ஸ்ரீராமனை அடைந்தனர். கண்டேன் தேவியை என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சூடாமணியை கொடுத்தான். அதனை கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார்.

சீதா தேவியின் நிராதரமான நிலையை நினைத்து பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்கு தயாராகும் படி கேட்டுக்கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திர கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும் பாறைகளையும் போட்டு இலங்கைக்கு போய் சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவருக்கும் இலங்கை தீவுக்கு சேர்ந்தார்கள். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாக பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா! நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்க காரணம் ராமேஸ்வரன் ஆகிய சிவபெருமானிடம் பெற்ற வரம். அவரும் உனது ஈனச் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டுவிடு. சீதா தேவியை ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம்.
அவர் நம்மை மன்னித்து அருள்வார் என்றான். ராவணன் கோபமாக விபீஷனை பார்த்து அசுர குலத்துக்கே நீ இழுக்கு நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்று எண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்கு கொடுத்து முடி சூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனை தூது அனுப்பினான். ராவணன் சீதையை விடுவிக்க முடியாது என பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி வில்லை முறித்து யுத்தகளத்தில் ராவணனை தலைகுனிய செய்தார். ராமன் நிறாயுத பாணியாக லங்கேஸ்வரன் நின்ற போது இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ராமர்.
அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனை போர்க்களத்துக்கு அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்த களத்தில் குதித்தான் இந்திரஜித் லக்ஷ்மணனையும் பிற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரதியற்றமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். அனுமன் ஜாம்பவானை தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தனர். அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையை கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான். இந்திரஜித் தன் நாக பிரம்ம பாசங்கள் தோல்வி அடைந்ததால் மிகப் பல என்ற யாகத்தை செய்யத் தொடங்கினான். அதற்கான ஓர் ரகசிய இடத்தை தேர்ந்தெடுத்து வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னை கொல்ல முடியாத வரம் பெற்று போர் முனைக்கு வர ஆயத்தமானார். அதை அறிந்த விபீஷணன் ராம லக்ஷ்மர்களிடம் விவரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று யாகத்தை தடுத்து இந்திரஜித் வதம் செய்ய வைத்தான். மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்பதை ராவணன் கேட்டு ஆடிப் போனான். இருப்பினும் ராமனிடம் அவன் பணியவில்லை.
தன் மூல பலத்தை திரட்டி கொண்டு போருக்கு வந்தான். தமது பானத்தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாறி பொழிந்தனர். கற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுகிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிச்சூடி வைத்தார். ராமர் பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்ப விமானத்தில் செல்லும்போது வழியில் கிஷ்கிந்தை பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கி சென்றார்கள். அயோத்தியே மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தில் அமர்த்தினான். வசிஸ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மங்களா அபிஷேகம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தர்ம நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீறும் சிறப்பும் பெற்று நிகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர்வலம் வந்தார்.

அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மை பற்றி பேசுவதை கேட்டால் அங்கே சீதா தேவியை பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதை கேட்டார். அந்த வார்த்தைகள் இராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயரு உற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்கு பயந்து கர்ப்பிணியான தன் சீதையை காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரை பணிந்தார். தாங்க முடியாத துயரத்துடன் வந்த சீதை ஜானகியை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்கச் செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர் அந்த குழந்தைகளுக்கு லவ, குசன் எனப் பெயரிட்டார். வால்மீகி அதேசமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு புதன், சந்திரகேது பரதனுக்கு தக்ஷன், புஷ்பறேன் சத்ருகணக்கு சுதாவும், சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர்.
பரதன் திக்விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களை கொண்டு வந்து ராமனிடம் சமர்பித்தான். சத்ருகனான லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மது வனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான். வால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி இராமனுடைய அரசவையில் அரங்கேற்றினார். அவர்கள் தம் குமாரர்கள் என்று அறிந்த ராமர் மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து அவளை அடைய எண்ணினார். ஸ்ரீ ராமனுடைய உள்ள கிடக்கையை அறிந்த வால்மீகி அவளை புனிதவதி என்று ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். சீதையோ தான் கற்பு தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தாள்.
அவள் இப்படி சொன்னதும் பூமி இரண்டாகப் பிளந்து அதனுள் இருந்து பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்ம பத்தினியை பிரித்து சென்று விட்டாள் என ராமர் கோபம் அடைந்தார். அப்போது, பிரம்மதேவர் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தில் உனக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகு, ராமர் சாந்தமடைந்தார். ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார். 13,000 ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார். அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். இவ்வாறு ராம அவதாரம் முடிவடைகிறது.
-பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.