ஓரு பக்கம் தேசிய கீதம் – இன்னோரு பக்கம் டெண்டருக்காக மிச்சர் , ஜிலேபியில் சண்டை திமுக – அதிமுக – வீடியோ

0

சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டமானது இன்று 29.05.2025 நடைபெற்றது.  இதில், திமுக- அதிமுக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். அப்போது, எதிர்க்கட்சியின் மாமன்ற தலைவர் யாதவமூர்த்தி தனது தொகுதி நிலவரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர், எல்.1 ஒப்பந்தத்தாரர்களுக்கு கொடுக்க வேண்டிய டெண்டரை ஏன் எல்.2 ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பினரார்.

அப்போது திமுக தரப்பில் இதுபற்றி நீங்கள் பேசக்கூடாது என்றனர். அதையும் மீறி அவர் அமைச்சர் தான் என்று பேச முற்படும்போது திமுக-வினர் அவரை சூழ்ந்துக்கொண்டனர். பின்னர் அவரை ஜிலேபியால் தாக்கியபோது, பதிலுக்கு அதிமுக கவுன்சிலரும் பதிலுக்கு மிச்சரைக்கொண்டு தாக்கியுள்ளார். பின்னர் கைகளப்பாகி 45 வார்டு கவுன்சிலர் சுஹாசினி கன்னத்தில் அறைந்துள்ளார்.

வீடியோ

இதனைக் கண்டித்து அதிமுக-வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரு பக்கம் தேசிய கீதம் – இன்னோரு பக்கம் டெண்டருக்காக மிச்சர், ஜிலேபி அடிதடியில் திமுக – அதிமுக இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இது குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரனிடம் பேசிய போது… நடந்த பிரச்சனைக்கு தீர்வு சொன்னபிறகு தொடர்ந்து பிரச்சனை செய்து இருந்தனர். இந்தநிலையில் கூட்டம் முடிவுற்றாதா அறிவித்து தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து கவுன்சிலர்கள் சண்டையிட்டு கொண்டது வருத்தத்தை அளிக்கிறது…என்றார்.

Leave A Reply

Your email address will not be published.