பால்கனியில் துணிகளைக் காயப் போட்டால் ரூ.22,033 அபராதம்!
வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய நாடான சவூதி அரேபியா சமீப காலமாக உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகிறது. அதற்காக அங்கு நடைமுறையில் இருந்த பல கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. குறிப்பாக திரையரங்குகளே இல்லாத நாடு என்ற பெயர் பெற்ற சவூதி அரேபியா அண்மை காலமாக திரையரங்குகளைத் திறந்து வருகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் நகரின் அழகை கெடுக்கும் வகையில் குடியிருப்புப் பகுதியின் பால்கனிகளில் துணிகளைத் துவைத்துக் காயப் போடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது. இதை மீறினால் 1000 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.22,033) அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது. வணிக வளாகம், கடை வீதி போன்ற பொது இடங்களில் குடியிருப்போர் இவ்வாறு துணிகளைக் காயப்போடுவதால் நகரின் அழகு கெட்டு விடுகிறது. இதனால் இவர்கள் மொட்டை மாடியில் துணிகளை காயப் போட்டு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதே போல் அபுதாபியிலும் அந்நாட்டு அரசு துணிகாயப்போட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.