உண்மை எப்போதும் இயல்பானது… பொய் என்றும், மோசடி செய்வது…
சீமான் டோன் மாற ஆரம்பித்த காலத்திலேயே தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக தலைவர் கோவை.ராமகிருஸ்ணன் ஆகியோரிடம் அலைசியில் தொடர்பு கொண்டு, “சீமான் பேசுவது சரியில்லை… பதில் கொடுங்கள்” என்றேன்.
முதல் படம் உண்மை. இரண்டாவது பொய்.
இருவருமே சொல்லி வைத்த மாதிரி, “உழைக்கவே செய்யாத, வெறும் பேச்சை மட்டுமே மூலலதனாக வைத்திருப்பவர்கள் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்கள். (வார்த்தைகள் வேறுபட்டு இருக்கலாம்.. அர்த்தம் இதுதான்!)
எல்லா விதத்திலும் உயர்ந்த மனிதர்களான அவர்கள் இருவருமே, “உண்மை காலணிகளை அணிவதற்கு முன்பே, பொய் உலகம் முழுவதும் பாதி சுற்றி வந்துவிடும்” என்பதை இந்த விசயத்தில் ஏற்கவில்லையே என்கிற வருத்தம் இருந்தது.
பரவாயில்லை.. மிகத் தாமதம் என்றாலும் சமீப காலமாக சீமானுக்கு புரியும்படியாக பதில் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் சிலர்.

அதுவரை மன நிறைவு!
கொளத்தூர் மணி, கோவை.ராமகிருஷ்ணன் ஆகியோர் பற்றி இன்னும் அறியாதவர்கள், கூகுளில் இவர்கள் பெயரைப் பதிந்து “கைது” என்கிற வார்த்தையை சேருங்கள்.. இருவரும் எந்தெந்த காலகட்டத்தில், எப்படிப்பட்ட போராட்டங்களை, யாருக்காக நடத்தினார்கள், சிறைவாசம் அனுபவித்தார்கள் என்பதை அறியலாம்.
— டி.வி.சோமு








Comments are closed, but trackbacks and pingbacks are open.