அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள்! தெய்வத்தமிழ் பேரவையினர் காவல் நிலையத்தில் புகார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 14ஆம் தேதி குடமுழுக்கையொட்டி நடைபெறும் யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்களை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்க வலியுறுத்திய  தெய்வ தமிழ் பேரவை அமைப்பினர் மீது சிவாச்சாரியார்கள் தாக்குதல்.

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள் மீது தெய்வத்தமிழ் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் ….

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகின்ற 14 ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை துவங்கியது.

இந்த நிலையில் யாகசாலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் ஓதுவார்களை நியமிக்க வலியுறுத்தி தெய்வதமிழ் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை தெய்வதமிழ் பேரவையினர்  யாகசாலைக்குள் சென்று தமிழ் ஓதுவார்கள் உள்ளனரா.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தெய்வத்தமிழ் பேரவை
தெய்வத்தமிழ் பேரவை

மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியபடி பெண் ஓதுவார்கள் உள்ளனரா என பார்க்க முயன்றனர். அப்போது அங்கிருந்த சுப்பிரமணியசுவாமி கோயில்  சிவாச்சாரியார்களுக்கும் தெய்வதமிழ் பேரவையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு லேசான்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தெய்வத்தமிழ் பேரவையின் சத்தியபாமா என்பவர் கீழே தள்ளிவிடப்பட்டார். இது திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலைய காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர். பின்னர் தெய்வ தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் சிவாச்சாரியார்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.