அரசுக்கு அவப்பெயர் தரும் மின்சார விநியோகம் ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு அரசு எல்லாத் துறைகளிலும் ‌முன்னணியில் ‌இருக்கிறது. புதிய புதிய திட்டங்கள், சாதனைகள், நலத்திட்ட சலுகைகள் , மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள். வழக்குகளில் வெற்றி. அடுக்கடுக்கான தேர்தல் வெற்றிகள்.

ஆனால் , மின்சார விநியோகத்தில் குளறுபடிகள். தொடர்ச்சியான தடங்கல். இரவிலும் பகலிலும் மின்சாரத் தடை .

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

திருச்சி கே.கே.நகர் , கிருஷ்ணமூர்த்தி நகரில் ஒரே நாள் இரவில் 5 முறை மின் தடை . பல நாட்களில் பகலிலும் மின்சார நிறுத்தம்.

தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலை என்று சொல்கிறார்கள்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

Apply for Admission

மின்கட்டண உயர்வுதி.மு.க ஆட்சி என்றாலே மின்சாரத் தட்டுப்பாடுதான் என்ற ஒரு கருத்து உள்ளது. கடைசியாக கலைஞரின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.

மின்சாரம் மக்கள் வாழ்வோடு நேரடித் தொடர்பு உள்ளது. மின்சாரம் இல்லை என்பது கோபத்தை ஏற்படுத்தும்.

மின்சார தடங்களால் வீடுகள், கடைகள் , தொழில் நிறுவனங்கள், உற்பத்தி பாதிக்கும் . மாநிலப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு வீழ்ச்சியுறும்.

இதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் இந்த மின் விநியோக குறைபாடுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனே தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

*- ஜவஹர் ஆறுமுகம் – மூத்த பத்திரிகையாளர்*

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.