மனம் குழம்பியவரிடம் மைக்கை நீட்டலாமா ?
பாடகி சுசித்ரா மனநலம் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றவில்லை. கலவரமான முகமாக இருக்கிறார். சில YouTube channels பரபரப்புக்காக அவரிடம் சினிமா சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் கருத்து கேட்கிறது.
அவரும் கிட்டத்தட்ட வாந்தி எடுக்கிறார். அவர் மனம் எங்கோ யாரலோ பலராலோ அடிவாங்கி அடிவாங்கி ஆழமான காயங்களை சுமந்துகொண்டிருக்கிறது என்பதைத் தான் அவரது பேச்சுகள் காண்பிக்கிறது

ஒரு காலத்தில் சிறந்த பாடகியாக வலம் வந்தவர். பல மேடைகளை பாடல்களால் அலங்கரித்தவர். ஒரு ரேடியோ ஜாக்கியாக புகழுடன் இருந்தவர் என்பது தெரிந்தும் அவர் மனம் குழம்பியவராக இருக்கும் நேரத்தில், அவரிடம் மைக்கை நீட்டும் இவர்களை என்ன சொல்வது?
பிணத்தை வைத்தும் கல்லா கட்டுகிறார்கள். மனநிலை திரிந்தவரிடமும் அதையே மூலதனமாக்கி சம்பாதிக்கிறார்கள். கேவலமாக இல்லையா மீடியா? YouTube channels-க்கும் கண்டிப்பாக editorial வேண்டும் என்கிற legislative decisionஐ மத்திய அரசு எடுக்க வேண்டும். மனம் திரிந்தவர்களை பேட்டியெடுக்கும் சானல்களை தடை செய்ய வேண்டும்.
— நாச்சியாள் சுகந்தி








Comments are closed, but trackbacks and pingbacks are open.