நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்  சார்பில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அவர்கள்  தகவல் தெரிவித்துள்ளார்.

​தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்  நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா 02.12.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 11.12.2024 அன்று சந்தனகூடு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள்  வருகைதர உள்ளனர். அதனை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Kauvery Cancer Institute App

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், மாண்புமிகு.போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி நடைபெற உள்ள கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு 01.12.2024 முதல் 12.12.2024 வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர்,  கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் – நாகூர் மற்றும் காரைக்கால் – நாகூர் வழித்தடத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மேலும், தற்காலிக வாகன நிறுத்தம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலிருந்து நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய மைதானம் (ITI GROUND), MODEL SCHOOL வாகன நிறுத்தம், வெண்ணாற்றாங்கரை வாகன நிறுத்தம் மற்றும் இரயில் நிலையம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் வட்டப்பேருந்து இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் 02.12.2024 அன்றும், 11.12.2024 அன்றும் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என  நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி அவர்கள்  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.