கல்வித்துறையில் கல்லா கட்டும் ’ரன்’ அதிகாரி
கல்வித்துறையில் கல்லா கட்டும் ’ரன்’ அதிகாரி
சங்கக் கால பெயரைக் கொண்ட மாவட்டத்தில் உள்ள மண்டல உயர்ந்த கல்வித்துறை அலுவலகத்தில் உதவி அதிகாரியாக ’ரன்’ பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார்.
இவர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வருகின்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு தனது உயரதிகாரியின் அனுமதி இல்லாமல் நேரடி விசிட் அடிக்கிறாராம். அப்படி ஆய்வு செய்யக்கூடிய இடத்தில் எல்லாம் அது சரியில்லை, இது சரியில்லை என்றுக்கூறி கல்லூரி மீது விசாரணை வைப்பதாக கூறி 1 லட்டுக்கும் மேல் மிரட்டி வாங்கிட்டு வருகிறாராம்.
அப்படி தனக்கு லட்டு கொடுக்கின்ற கல்லூரி மீது எதாவது புகார் வந்து அதற்கு நடவடிக்கை எடுக்க மேலதிகாரிகள் தயாரானால் உடனே சம்பந்தப்பட்ட கல்லூரியின் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தகவலை வழங்கிவிடுகிறாராம்.
இதெல்லாம் தாண்டி கல்லூரிகள் மீது பாலியல் புகார்கள் பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பினால் அதனை போட்டோ எடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வருக்கே அனுப்பி வைக்ககிறாராம் அந்த மகத்தான அதிகாரி. இது தொடர்பாக மேலதிகாரிகள் புகார் அனுப்ப நினைத்தால், தனது செல்வாக்கால் அவர்களையே மாற்றிவிடுகிறாராம்.
காரணம், பலாப்பழ அரசியல்வாதியான முன்னாள் முதல்வரின் நெருங்கிய உறவினரான பாண்டிய மன்னன் பெயரைக் கொண்டவர் தனது நண்பர் என்று மார் தட்டி வருகிறாராம்.
-ஜித்தன்