சுரைக் குடுவை என்றால் என்ன தெரியுமா ?

0

சுரைக் குடுவை சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் சுரை குடுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் ஆதரவற்ற அனாதை பிரதேங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சுரக்குடுவை குறித்து பேசுகையில், நம் பாரம்பரியம் நமது பெருமை அவ்வகையில் இல்லத்திலேயே புழங்கு பொருட்களை வைத்து காட்சியகம் அமைத்துள்ளேன்.

https://businesstrichy.com/the-royal-mahal/

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவற்றில் ஒன்றுதான் சுரைக்குடுவை. சுரைக்காய் ( Bottle gourd) ஒரு காய் என்று தெரியும். இது உண்ணும் காயாக மட்டுமல்ல, நீரை சேமித்து வைக்கும் கலனாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுரைக்காயின் உள்ளிருக்கும் சதைப் பகுதிகளை அகற்றிவிட்டு, காயை காய வைத்தால், அது குடுவையாக மாறிவிடும். அதில் நீர் சேமித்து வைப்பார்கள்.

நீச்சல் பயிலுபவர்கள் பழங்காலத்தில் சுரை குடுவை பயன்படுத்தி நீச்சல் பயின்றதும் உண்டு. நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணமும் நிறைந்துள்ளது. சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால் ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று அழைக்கப்படுகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முற்றின காய்ந்த சுரைக்காய், இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.