பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்' . இந்த திருக்கோயிலில் "கார்த்திகை தீப திருவிழா' உழக பிரசித்தி பெற்றது .
கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் செய்யப்பட்டது. எனவே, இத்தல லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது.