சுனாமியே பார்த்தவர்கள் சிறு தூறலுக்கு கலைந்திடுவோமா ?
ஓரணியில் தமிழ்நாடு – பட்டினப்பாக்கம் கடற்கரை பொதுக்கூட்டம். தூறல்களுக்கிடையே பேச்சு தொடங்கியது.
“மழையை, புயலை மட்டுமல்ல, சுனாமியையே எதிர்கொண்டு வாழ்கின்ற மீனவ சமுதாய மக்கள் நிறைந்த இந்தக் கூட்டம், நம் மண், மொழி, மானம் ஆகியவற்றை அழிக்க நினைக்கும் சுனாமியான பாஜகவை எதிர்கொண்டு, அதற்கு அடிமைச் சேவகம் செய்யும் அதிமுகவையும் சேர்த்து விரட்டியடிக்கும்.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்பவர்களை எதிர்கொண்டபடியே, மக்கள் நலன் காக்கும் திட்டங்களை வழங்கி வரும் கழகத் தலைவரை மீண்டும் முதலமைச்சராக்கும்”
(மழை வலுக்கிறது. குடையுடன் வந்தவர்கள் நின்று கேட்கிறார்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் ஓரமாக ஒதுங்குகிறார்கள்)
“ஓரணியில் தமிழ்நாடு என்று ஒருங்கிணைந்து வந்தவர்கள், ஒன்றாகப் புறப்படுங்கள். நாளை உங்கள் வீடு தேடி வருவோம். இது மக்களுக்கான இயக்கம். மக்களுடன் நிற்கும் இயக்கம்”
கூடியவர்கள் தங்கள் அன்பை ஆரவாரத்தால் வெளிப்படுத்தினர். மேடையில் இருந்த நிர்வாகிகள் கைத்தட்டி, கை கொடுத்து பாராட்டினர்.
பேச்சு அளவாகவும், செயல் நிறைவாகவும் கழகத்தின் ஓரணியில் தமிழ்நாடு.