ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிய பணியிடங்கள் அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் துறையூர், ஸ்ரீரங்கம், துவரங்குறிச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தலா ஒரு Consultant (மருத்துவர்) பணியிடம் ரூ.40,000/- ஊதியத்திலும் துறையூர், ஸ்ரீரங்கம், துவரங்குறிச்சி மற்றும் மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக Attender/Multipurpose Hospital Worker(MPHW) ரூ.10,000/-மாத ஊதியத்திலும் இலால்குடி அரசு மருத்துவமனையில் ஒரு Male Therapeutic Assistant பணியிடம் ரூ.15,000/-மாத ஊதியத்திலும், ஒரு Female Therapeutic Assistant பணியிடம் ரூ.15,000/- மாத ஊதியத்திலும், ஒரு Multipurpose Hospital Worker(MPHW) பணியிடம் ரூ.10,000/-மாத ஊதியத்திலும், நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு Male Therapeutic Assistant பணியிடம் ரூ.13,000/-மாத ஊதியத்திலும் நவல்பட்டு மற்றும் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா ஒரு Female Therapeutic Assistant பணியிடம் ரூ.13,000/- மாத ஊதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
மேற்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், புத்தூர், அரசு மருத்தவமனை, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகம், திருச்சி-17. என்ற முகவாிக்கு அனுப்பி வைத்து பயன் பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.