சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.

0

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.

துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் லாரி டயர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் நிலைய தலைமை காவலர் பலி…

திருச்சி மாவட்டம் துறையூர் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சரவண பெருமாள் வயது 45. இவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நடந்து மோகனப்பிரியா என்ற மனைவியும் சூர்யா, கௌதம் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம்உப்பிலியபுரம் காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் தலைமை காவலர் சரவணப் பெருமாள் சென்று கொண்டிருந்தார் வெங்கடாசலபுரம் கிராமத்தை தாண்டும்பொழுது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற பொழுது லாரியின் பின் சக்கர டயர் வெடித்து எதிர்பாராத விதமாக தலைமை காவலர் சரவணபெருமாள் மீது ஏறி இறங்கியது.

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி ஒரு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலைமை காவலர் பணியில் இருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் பலியான சம்பவம் சக போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.