திருமலா பால் 40 கோடி மோசடி ! மேலாளர் தற்கொலை ! FIR போடாமலே விசாரித்ததா போலீஸ் !
திருமலா பால் 40 கோடி மோசடி ! மேலாளர் தற்கொலை ! FIR போடாமலே விசாரித்ததா போலீஸ் !
திருமலா பால் நிறுவனத்தில், அதன் கரூவூல அதிகாரியாக பணியாற்றிய ஆந்திராவை சேர்ந்த நவீன் பொலினேனி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவரும் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாகவும் சொன்னதாக சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில், போலீசில் புகார் அளித்தநிலையில் போலீசார் எஃப்.ஐ.ஆர். போடாமலேயே அவரை விசாரித்து வந்ததாகவும்; குறிப்பாக, அவரது குடும்பத்தையும் வழக்கில் சேர்த்துவிடுவோம் என்பதாக போலீசார் மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை மாநகர போலீசார் இதனை மறுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், இன்னும் போலீசின் விசாரணையே தொடங்கவில்லை என்கிறார்கள். என்னதான் நடந்தது?