பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் – திருச்சியில் நடைபயணம் !
பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்தில் கிழக்குபகுதி குழு சார்பில் சிந்தாமணி அண்ணாசிலையில் 15/05/2023 மாலை 6.00 மணிக்கு பகுதி செயலாளர் S.சையது அபுதாஹீர்தலைமையில் நடைபெற்றது.
AITUC மாவட்டசெயலாளர், 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர். க. சுரேஷ் நடை பயணத்தை துவக்கி வைத்து பேசினார்கள். சிந்தாமணி கடைவீதி, பெரியசாமி டவர் காளியம்மன் கோயில்தெரு, நந்தி கோயில்தெரு, NSB ரோடு தேரடி பஜார்உள்ள பகுதி முழுவதும் நடைபயண இயக்கம் நடைபெற்றது.
துணை செயலாளர் கே.கே.முருகேசன். AlTUC தரைக்கடை சங்கமாவட்ட செயலாளர் A.அன்சர் தீன், B.R.ஜெயகுமார், சரவணன், சாகுல், குமார். சின்னமணி.ரவி. பெருமாள், நாகராஜ், பருத்தி.ராஜேஸ்வரி, சரசு சுப்பு,ரமேஷ். வ.உ.சி அருண், நாராயணன், கண்ணன். கார்த்தி.சுப்ரமணி. அன்சாரி, ஜம்பு. ஜாவித் உள்ளிட்ட பகுதிதோழர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள் CPIமாவட்ட செயலாளர் S.சிவா முடித்து வைத்து உரையாற்றினார்கள்.