ரூ. 50 லட்சம் செலவில் தார் சாலை ! அமைச்சருக்கு நன்றி தொிவித்த திருச்சி வழக்கறிஞர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தார் சாலை மிகவும் மோசம் நிலையில் உள்ளதால் மூத்த வழக்கறிஞர்கள் டி.ஏ.ஓம்பிரகாஷ், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தமிழ்நாடு அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல்  ஆர். பாஸ்கரன்,      திருச்சி அரசு வழக்கறிஞர்கள் டி.மோகன், பி.சவரிமுத்து, மற்றும் இதர அரசு வழக்கறிஞர்கள், திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன், செயலாளர் முத்துமாரி மற்றும் இதர சங்க நிர்வாகிகள், திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரதிநிதி வழக்கறிஞர் அ.மணிவண்ண பாரதி, மாநகர திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சி.அந்தோணிராஜ் ஆகியோர்.

திருச்சி கோர்ட் வளாகம்திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவை நேரில் சந்தித்து திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் தார் சாலையை உடனடியாக சீரமைத்து தருமாறு கோரிக்கை  விடுத்தனர்.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

திருச்சி கோர்ட் வளாகம்
திருச்சி கோர்ட் வளாகம்

அதன் பேரில் அவர்களின் கோரிக்கையை ஏற்று  அமைச்சர் கே.என். நேரு உடனடியாக தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். உடனடியாக அதற்கான  பணிகள் தொடங்கி நடைபெற்று முடிவடைந்துள்ளது. நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கிய அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர் திருச்சி  வழக்கறிஞர்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.