பூதலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு பணி!
தஞ்சாவூர் மாவட்டம் 28. 05 .25 உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நந்தவனப்பட்டி ஊராட்சி அய்யனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திட்டத்தின் ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துறையின் துணை இயக்குனர் திருமதி சாருமதி அவர்கள் கலந்து கொண்டு கிராமத்தில் நடைபெறும் குறைகள் வளர்ச்சித் திட்டங்கள் துப்புரவு பணியாளர்கள் அவர்களின் செயல்முறைகள் குடிநீர், மின்விளக்கு போன்ற திட்டங்கள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஆனந்த், பூதலூர் வேளாண்மை அலுவலர் வி.ஏ.ஓ., ஜெயசீலன், காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தலைவர் சாமிநாதன், ஊராட்சி செயலாளர் கண்ணையன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது பல்வேறு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டவை கருத்துக்களை ஊராட்சி சிறப்பாக முறையில் செயல்படுவதாக சொன்னதின் அடிப்படையில் வேளாண்மை துறை இயக்குனர் அவர்கள் சிறப்பான முறையில் ஆய்வு செய்து முடித்தார்கள்.
— தஞ்சை கார் நடராஜன்.