திருவாரூர் பெட்டிக்கடை வியாபாரியிடம் நலம் விசாரித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

த்திய நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன் சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.  அப்போது மூலவர் ஸ்ரீவன்மீகநாதர், பிரதான மூர்த்தியான ஸ்ரீதியாகராஜ சுவாமி மற்றும் விடங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீமரகலிங்க அபிஷேகம் அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தார்.

நிர்மலாசீத்தாராமன்
நிர்மலாசீத்தாராமன்

இந்த வார அங்குசம் வார இதழில்…

பின்னர், ஸ்ரீரௌத்திர துர்க்கையம்மன் சன்னதி, ஸ்ரீகமலாம்பாள், ஸ்ரீநீலோத்பலாம்பாள் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.  அமைச்சர் நிர்மலாசீத்தராமன் சாமி தரிசனம் செய்தபோது ஆலய சிவாச்சாரியார்கள் அந்தந்த சுவாமி சன்னதிகளின் சிறப்பை எடுத்துசொல்லி தீபாராதனை காண்பித்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இசைக்கு வடிவம் கொடுத்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் திருவாரூர் மேலவடம் போக்கித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் அவதரித்த இல்லத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நிர்மலாசீத்தாராமன்
நிர்மலாசீத்தாராமன்

பின்னர் மேலவடம் போக்கித்தெரு பகுதியில் வேலைபார்த்து கொண்டிருந்த சித்ரா என்ற தூய்மை பணியாளரிடம் நலம் விசாரித்ததோடு, பணியினை சிறப்பாக செய்துவருவதற்கும், நல்லமுறையில் செய்திடவும் அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அங்குள்ள பெட்டிகடை ஒன்றில் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என கேட்டறிந்தார்.  தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களை மிஸ்டுகால் கொடுக்க சொல்லி பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

—  மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.