அங்குசம் பார்வையில் ‘ஏஸ்’
தயாரிப்பு & டைரக்ஷன் : 7 சிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ஆறுமுககுமார். ஆர்டிஸ்ட்: விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகிபாபு, திவ்யா பிள்ளை, பப்லு[எ] பிருத்விராஜ், அவினாஷ், ராஜ்குமார். ஒளிப்பதிவு : கரண் பி.ராவத், பாடல்கள் இசை : ஜஸ்டின் பிரபாகர், பின்னணி இசை : சாம்.சி.எஸ். எடிட்டிங் : ஃபென்னி ஆலிவர், ஸ்டண்ட் டைரக்டர்ஸ் : தினேஷ் சுப்பராயன், டான் அசோக், ரிக்கி, ஜேம்ஸ் சுங், ஆர்ட் டைரக்டர் : ஏ.கே.முத்து, டான்ஸ் மாஸ்டர்ஸ் : ராஜு சுந்தரம், லீலாவதி, காஸ்ட்யூம் டிசைனர் : சப்னா கல்ரா, தயாரிப்பு நிர்வாகி : சாயி சுந்தர். பி.ஆர்.ஓ.: யுவராஜ்.
துபாய் ஜெயிலிலிருந்து ரிலீசாகும் போல்ட் கண்ணன் [ விஜய் சேதுபதி] ஒரு பெரிய அசைன்மெண்டுடன் மலேசியாவுக்குப் போகிறார். அங்கே பெரிய பிஸ்னஸ் மேன் என புருடாவிடும் அறிவு [ யோகிபாபு ] அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். மலேசியா பஸ்ஸில் எதேச்சையாக ருக்குவை [ ருக்மணி வசந்த்] சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே செல்போன் திருடனாக சேதுவை நினைக்கிறார் ருக்கு. இப்படி ஆரம்பிச்சாத் தானே அடுத்தடுத்து லவ் டெவலப்பாகும் என்ற இந்திய சினிமாவின் ஃபார்முலாப்படி மலேசியாவில் வி.சே. & ருக்மணி வசந்தின் லவ் டெவலப்பாகிறது. ருக்குவின் வளர்ப்பு அப்பா பப்லு மலேசியாவில் பொறுக்கி போலீசாக இருக்கிறார். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் வீட்டைவிட்டு வெளியேறுவதாக ருக்குவையும் டார்ச்சர் பண்ணுகிறார் பப்லு. தனது லவ்வருக்காகவும் கந்துவட்டி வில்லன் அவினாஷிடம் பட்ட கடனுக்காவும் யோகிபாபுவின் ஒன்சைட் லவ்வர் திவ்யா பிள்ளைக்காகவும் மலேசியாவின் ஒசிபிசி பேங்கை கொள்ளையடிக்கிறார் விஜய் சேதுபதி.
முகமூடி[?] போட்டு கொள்ளையடித்ததால் சேதுவைப் பிடிக்க முடியாமல் மலேசியா போலீஸ் திணறுகிறது. ’வாட் நெக்ஸ்ட்’ இதான் ‘ஏஸ்’.
நம்ம சேது படமாச்சே, இரண்டு மணி நேர எண்டெர்டெய்மெண்டுக்கும் கன்ஃபார்ம் க்யாரண்டி, கண்டெண்ட்டும் வெயிட்டா இருக்கும்னு நம்பிப் போனோம். நமது நம்பிக்கையில் முதல்பகுதி தான் ஓகே ஆச்சு. கண்டெண்ட் கண்டமாயிருச்சு. மத்தபடி சேதுவின் அசால்டான பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரி, “ஆமா சார்…எஸ் சார்”னு யோகிபாபுவிடம் முதலில் பம்முவது, குப்பையில் பாட்டில் பொறுக்கும் பார்ட்டி தான் யோகிபாபு தான் எனத் தெரிந்ததும் “டேய் அவனா நீ..” என ஏகாசி பண்ணுவது என போல்ட் கண்ணன் சேது பொளந்து கட்டுகிறார்.
பளிச்சென்ற முகத்தில் மென்சோகம், சேதுவிடம் சிடுசிடுப்பு, கடுகடுப்பு, காதல் வந்த பின் சிலிர்ப்பு, வளர்ப்பு அப்பனால் தவிப்பு, என படம் முழுக்க நிறைவாக, உயர்வாக வலம் வருகிறார் ருக்குமணி வசந்த். படத்தின் ஏகபோக காமெடிக்கு யோகிபாபு. “டேய்.. யார்டா நீ… “ என க்ளைமாக்ஸ் வரை சேதுவைப் பார்த்து அலறியே சிரிக்க வைக்கிறார். நம்ம பெசண்ட் ரவி, பொன்னம்பலம் ரேஞ்சுல தான் இருக்கார் மலேசியா கந்துவட்டி வில்லன் அவினாஷ்.
எந்நேரமும் சரக்கு, பொம்பள சோக்குன்னு கொஞ்சம் ஸ்டைலிஷ் வில்லனா வர்றார் பப்லு.
அப்புறம் ஒரு முக்கியமான கேரக்டர மறந்துட்டோமே. அத சொல்லலைன்னா விமர்சனக்குத்தமாயிருமே. அட ஆமாங்க, கல்பனாவாக வரும் திவ்யா பிள்ளை தாங்க. பார்க்க புஷ்யாவும் இருக்காரு, சேலையிலும் சரி, டவுடர்—டீஷர்ட்டிலும் சரி சும்மா கும்முன்னும் இருக்காரு.
லாஜிக்கையெல்லாம் கண்டெய்னர் லாரியில ஏத்தி இங்கேயே பெரிய வேர்ஹவுஸிங்ல வச்சு பூட்டிட்டு மலேசியாவுல ‘ஏஸ்’ஷூட்டிங் நடத்தப் போய்ட்டாரு போல டைரக்டர் ஆறுமுககுமார். கொள்ளையன் வில்லனா இருந்தாலும் சரி, ஹீரோவா இருந்தாலும் சரி, தப்பிக்கவிட்டுட்டு லோலோன்னு அலையுறதுல எல்லா நாட்டுப் போலீசும் ஒரே மாதிரி இருப்பாய்ங்க போல. பேங்க்ல கொள்ளையடிச்சுட்டு சேது வெளியே வந்ததும் கேப்விட்டு கேப்விட்டு ரெண்டு போலீஸ் டூவீலர்ல வந்து சேதுவுடன் மல்லுக்கட்டுறாய்ங்க. அதனால் பார்த்தாரு ஆறுமுககுமாரு, ‘பலாய் போலீஸ், குலாலுங்கட்டுன்னு ‘நேம் போர்ட்டை சேஞ்ச்’ பண்ணி [ அதாங்க மலாய் போலீஸ், கோலாலம்பூர்] எஸ்கேப்பாகிட்டார் ‘ஏஸ்’ ஆறுமுககுமார். ஆமா டைரக்டரே.. மலேசியாவில் போல்ட் கண்ணனின் ‘அசைன்மெண்ட்’ டுங்கிறது பேங்க் கொள்ளைதானா?
பாடல்களில் ஜஸ்டின் பிரபாகரின் இனிமையும் ஒளிப்பதிவில் கரண் ராவத்தின் கடின உழைப்பும் ‘ஏஸ்’-க்குப் பக்கத்தில் ‘கிங்’காக இருக்கிறது.
பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் இல்லாத கண்டெண்டால் ‘ஏஸ்’பில்டிங் கொஞ்சம் ‘வீக்’ தான்.
— மதுரைமாறன்.