தட்டுங்கள் திறக்கப்படும்!.. கேளுங்கள் கொடுக்கப்படும்!.. சட்டப்பேரவை அறிவிப்புகளை வரவேற்று பாராட்டும்! – ஐபெட்டோ வா.அண்ணாமலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் (28.04.2025) 110 விதியின் கீழ் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வண்ணம் ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
முதல் 8 அறிவிப்புகள் பணப்பயன் பெறக்கூடிய அறிவிப்புகள் ஆகும். அதனை வரவேற்று பாராட்டுகளை தொிவித்து தமிழக ஆசிரியர் கூட்டணி மற்றும் ஐபெட்டோ வா.அண்ணாமலை அவா்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
*கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

*நமது தொடர் போராட்டங்களின் வாயிலாகவும், அண்ணன் ஐபெட் டோ அகில இந்திய ச் செயலாளர் அவர்களின் அன்றாட புலனப் பதிவுகளின் அழுத்தத்தின் காரணமாகவும் ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
*இரண்டாவது அறிவிப்பாக 01-01-2025 முதல் 2% விழுக்காடு அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்… 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தியுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்துகின்ற போதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
*மூன்றாவது அறிவிப்பு… அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
*நான்காவது அறிவிப்பு… அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பாகும்.
*ஐந்தாவது அறிவிப்பாக… அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் அறிவிப்பும் வரவேற்று பாராட்டக்கூடியதாகும்.

*ஆறாவது அறிவிப்பாக… தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியாளர் உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். இதன் காரணமாக ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
*ஏழாவது அறிவிப்பாக… ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும்..*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்புகளில் பெரிதும் வரவேற்று பாராட்ட வேண்டிய எட்டாவது அறிவிப்பு…
*திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். என்ற அறிவிப்பு சிறப்பானதாகும்.
*ஒன்பதாவது அறிவிப்பாக… பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
* பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல் தொடர்பான அறிவிப்பினை நாம் விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மட்டுமே அமல்படுத்த வேண்டும்!.. மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை!.. என்பதை வலியுறுத்தி…. தேர்தல் கால வாக்குறுதியினை அமல்படுத்துவதற்கான உறுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏனைய கூட்டமைப்புகள் அந்த நம்பிக்கையில் நமது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்!..
*தட்டுங்கள் திறக்கப்படும்!.. கேளுங்கள் கொடுக்கப்படும்!.. என்பது அர்த்தமுள்ள வரிகளாகும்.
*நம்மைப் பொறுத்த வரையில் தொடர்ந்து போராடுவதன் மூலமாக தான் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம்!…
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்… புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், மாநில அளவிலான ஆசிரியர்கள் முன்னுரிமை அரசாணை 243 ஐ திரும்ப பெறுதல், மேற்படிப்பிற்கான ஊக்க ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடுதல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வு நிலை தர ஊதியம் தணிக்கை தடை நீக்குதல்… உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த அரசிடம் இருந்து பெற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள அறிவிப்புகளை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும், ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும்… வரவேற்றுப் பாராட்டுகளையும் தொிவித்துள்ளனர்.