திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியில் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம் !

0

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியில் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம் !

இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம்
இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம்

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி செப்பர்டு விரிவாக்க துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை, தமிழ்நாடு அரசு, நிதியுதவியுடன் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் திட்டத்தை (Young Student Scientist Programme- YSSP-2023-24)2023, டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 2024, ஜனவரி 9-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் 15 நாட்கள் ((Residential YSSP) ) நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இப்பயிற்சியின் வழியாக பள்ளி மாணவ மாணவியர்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும் ஆய்வு நோக்கில் கற்கவும் நடைமுறை வாழ்க்கையில் அறிவியலை புரிந்து கொண்டு வாழ்வதற்கு வாய்ப்பாக அமையும் நோக்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் (9th Std) வகுப்பில் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் முதன்மை பெறும் எண்பது (80) மாணவ மாணவிகள் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்லூரியில் தங்கி முற்பகலில் அறிவியல் பாட வகுப்புகளிலும் பிற்பகலில் அறிவியல் சோதனை வகுப்புக்களிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம்
இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் முகாம்

கல்லூரி முதல்வர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் சே.ச  வழிகாட்டுதலின் படி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச  துணையுடன் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், YSSP திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இளம் மாணவர் அறிவியல் அறிஞர்கள் பாட திட்டம் வழியாக பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

கற்றுணர்தல் நிகழ்வாக அண்ணா அறிவியல் மையத்திற்கும் கல்லூரி பழமை வாய்ந்த அருங்காட்சியகத்திற்கும் மற்றும் டால்மியா சிமெண்ட் தொழிற்சாலைக்கும் சென்று வந்தனர். மேலும் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் வருகின்ற 2024 ஜனவரி 9 ஆம் தேதி தாங்கள்; அறிவியல் பூர்வமாக கற்று உணர்ந்த வேதியல் தாவரவியல் இயற்பியல் கணினி அறிவியல் உயிரியல் பாடங்களை கொண்டு உருவாக்கிய பொருட்களை கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சியின் முடிவில் பங்குபெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் விரிவாக்கத்துறை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டும் வகையில் மாணவ மாணவிகளின் பெற்றோருடன் நர்சரி பைகளில் விதை ஊன்றி முளைத்த கன்றுகளை மாணவர்களுக்கே வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.