திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..

0

திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 9/11/2020 அன்று இரவு நர்மதா 17/2020 தனது தாயுடன் செங்கிப்பட்டி செல்ல பேருந்துக்காக காத்து இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பவில்லை இதனால் பதற்றம் அடைந்த தாய் அங்குமிங்கும் தேடி அலைந்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பதற்றமடைந்த தாய் பணியில் இருந்த போலீசாரிடம் உதவி கேட்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 23/11/2020 அன்று கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் புகாரை ஏற்று மாயமான சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.