அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

4 கிலோ கஞ்சா பறிமுதல் ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம். இராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் 2212.2025 அன்று மதியம் சுமார் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த இராம்ஜிநகர், காட்டூர் பகுதியை சேர்ந்த மதன் (எ)சக்தி (34), த.பெ. நமச்சிவாயம், என்பவர் மீது 22.12.25 அன்று திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்
திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் எதிரியான மதன் (எ) சக்தி (34), த.பெ. நமச்சிவாயம் காட்டூர். இராம்ஜிநகர். ஸ்ரீரங்கம் தாலுக்கா, திருச்சி மாவட்டம் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாப,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (28.01.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026) இது வரை மூன்று தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.