அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புழல் சிறைக் காவலர் கொலை: திமுக பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் சரண்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

 

புழல் சிறைக் காவலர் கொலை:
திமுக பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் சரண்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

புழல் சிறைக் காவலர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றிய இன்பரசு செங்கல்பட்டு அருகே நேற்று (திங்கள்கிழமை) பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், காவலர் இன்பரசு கொலைவழக்கில் தொடர்புடைய செந்தில், ராஜதுரை, வரதராஜ், ஜான்சன், விக்னேஷ் ஆகிய 5 பேர் தஞ்சை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

https://www.livyashree.com/

இதையடுத்து அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் வரதராஜன் என்பவர் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றய தலைவர் மணிமேகலை பெருமாள் என்பவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.