விநாயகா் சிலை கரைப்பில் 8 பேர் உயிரிழப்பு

0

புதுடெல்லி

     குஜராத்தின் காந்திநகர் மாவட்டம், தேகாம் பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதன்பிறகு 9 பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நீச்சல் வீரா்கள் பல மணி நேரம் ஆற்றில் தேடி 8 பேரின் உடல்களை மீட்டனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

     உயிரிழந்த 8 பேரும் நெருங்கிய உறவினர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். ஆற்றில் மூழ்கி இறந்த ஜஸ்பால் என்பவரைின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிராக் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த 8 பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகும்.

     குஜராத்தின் தேகாம் பகுதியில் 8 பேர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

 

Leave A Reply

Your email address will not be published.