தமிழ்நாடு தீயணைப்பு துறையின் சார்பில் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சென்று தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்புத் துறையில் பணியில் தீயணைப்பு ஒரு பதவி நிலை, அலுவலர் பதவி, மற்றும் மாவட்ட அலுவலர் பதவி, ஆகிய பணிகளில் சேர்வது எப்படி. என்பதையும் உடல் தகுதி தேர்வு எழுத்துத்தேர்வு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றை பற்றி முழு விளக்கம் மாணவ மாணவிகளிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் தீ விபத்து மற்றும் உயிர் மீட்பு அவசர அழைப்பு வந்தால் அதை எந்த அளவிற்க்கு மீட்க துரிதமாக செயல்பட வேண்டும் என்பதை தீயணைப்பு படை வீரர்கள் செய்து காட்டினர். மேலும் குறுகிய இடங்களிலும் மக்கள் அதிகம் உள்ள இடங்களிலும் நடக்கும் விபத்துகளை எந்த அளவிற்கு கையாள வேண்டும் என்பதை பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
இந்த நிகழ்வு குமுளுர் வேளாண்மை கல்லூரி மற்றும் இலால்குடி டான் போஸ்கோ தொழிற்கல்வி நிலையத்திலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஆர் பிரபு சிறப்பு நிலைய அலுவலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மற்றும் தீ யணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.