கல்லூரி மாணவிகளுக்கான தீ தடுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சி !
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை இயக்குனரின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின்படி அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் பயிற்சி நிலைய அலுவலர் அறிவழகன் சிறப்பு நிலை அலுவலர் கணேஷ் மற்றும் நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பிறகனூர் தனியார் பெண்கள் கல்லூரி மற்றும் அனுப்பானடி தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் சீட் எடுப்பு மற்றும் தீ செயல்முறை விளக்கம் செயல்முறை மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் தீ விபத்து மற்றும் குறித்து செயல்முறை விளக்க பயிற்சிகளை தெரிந்து கொண்டனர். திடீரென சிலிண்டர் தீபற்றி எரிவதை தடுக்கவும் மற்ற உபகரணங்களில் தீப்பற்றும்போது எவ்வாறு அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் தீயை அணைக்கும் பயிற்சியினை தீயணைப்பு நிலை அலுவலர்கள் செய்து காண்பித்தனர் .
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.