சுகாதார முன்னெடுப்பில் தமிழக அரசுடன் கைகோர்த்த ரோட்டரி !
ரோட்டரி தலைமையிலான சுகாதார முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தமிழக அரசுடன் இணைந்து டயாலிசிஸ் இயந்திர ஆதரவு மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி முகாம்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த தமிழக அரசு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது, ரோட்டரி இண்டர்நேஷனல்.

இம்முயற்சியின் தொடக்கமாக, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்களுடனும், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் டாரெஸ் அகமது அவர்களுடனும், டிஜி ஸ்ரீராம், டிஜி சுரேஷ் ஜெயின், பி.டி.ஜி. ஆர்.ஆர்.எஃப்சி. ஸ்ரீதர் மற்றும் பி.டி.ஜி. சரவணன் ஆகியோருடனும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முந்தைய கையெழுத்திடும் கூட்டத்தில் ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் பங்கேற்றார்.
இம்முயற்சி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய, தடுப்புமுறையிலான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரப் பராமரிப்புக்கான ரோட்டரியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.