மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் காங்கிரஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் மேய்ப்பர் இல்லாத ஆட்டு மந்தைகள் போல் தான்தோன்றி தனமாக பேசிக் கொண்டு தங்களது இருப்பை பதிவு செய்து கொண்டு இருப்பது பரிதாபம் .

திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் இப்பொழுதும் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறார்கள் என்பதை, தலைவர் வைகோ பற்றி உண்மைக்கு மாறான அவதூறு பேச்சுகளுக்கு பிறகு தான் பலருக்கு திருச்சி யில் தெரியவந்தது.

 

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

– Rohaiyaah sheik mohamed

தமிழக நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட தலைவர் வைகோ பற்றி பதிவு செய்வதற்கு முன்பு திருச்சி வேலுச்சாமி தன்னை சுயபரிசோதனை செய்து இருக்க வேண்டும் “தான் யார் என்பதை ”

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அகில இந்திய அளவில் காங்கிரஸ் காஷ்மீர் பிரச்சனையில் அவர்கள் கடந்த காலங்களில் எடுத்த நிலைப்பாடுகளை பற்றி தான் தலைவர் வைகோ அவர்கள் மாநிலங்களவை யில் உரையாற்றினார். அது வரலாற்று உண்மை இதற்கு ஏன் தமிழ காங்கிரஸ் இவ்வளவு எதிர்வினை ஆற்றுகிறது? ?? பத்து வருடம் பிரதமாராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் வைகோ நாடாளுமன்ற உரை சிறப்பு என வாழ்த்திய பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் வேலுச்சாமி .

50 வருடங்களுக்கு முன்பு யானை பலத்துடன் இருந்த காங்கிரஸ் தனது மோசமான செயல்பாட்டால் இன்று பூனைக்குட்டி யாக உலா வருவது அனைவருக்கும் தெரியும்.

இந்த பூனைக்கு மணி கட்டுவது யார் ?

நேற்று முதலை கதை ,இன்று யானை பூனை கதை ,நாளைக்கு என்னன்னு தெரியல. …..

திருச்சி தினமலர் வேலுச்சாமி பதிவை மகிழ்ச்சி யுடன் வெளியிட்ட மாதிரி எங்கள் பதிவையும் வெளியிட்டு உங்கள் ஊடக தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் .

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.