அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

துறையூரில் பரபரப்பு 8 லட்சம் மதிப்புள்ள குட்கா – பான் மசாலா

0

திருச்சியில் அடகு நகையை விற்க

துறையூரில் பரபரப்பு 8 லட்சம் மதிப்புள்ள குட்கா – பான் மசாலா பறிமுதல் ..

திருச்சி மாவட்டம்,துறையூரில் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 826 கிலோ அளவிலான , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா , புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பக்குளம் அருகே ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா , புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்தரகசிய தகவலின் படி திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் ,இன்று காலை நேரில்சென்று ஆய்வு செய்தனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அப்பொழுது தெப்பக்குளம் அருகே பாலாஜி என்பவரது கடையில் 20 பாக்கெட் குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் கடைக்கு அருகே இருந்த ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

முதல்வர் பிறந்தநாள்

இது பற்றி மேலும் விசாரணை செய்ததில் , தெப்பக்குளம் பகுதியில் உள்ள பர்வீன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் உத்தம்சிங் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து , அதனை குடோனாக மாற்றி , அதனுள்மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 826 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களைபறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும்.இதனையடுத்து குட்கா பொருட்கள் மற்றும் அதனை விற்பனை செய்ததாக உத்தம்சிங் மற்றும் பாலாஜி என்பவரை துறையூர் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.துறையூரில் நகரப் பகுதியில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.