9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – போலிஸ் எஸ்.ஐ.  போக்சோவில் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; போலிஸ் எஸ்.ஐ.  போக்சோவில் கைது

சென்னை ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற போலிஸ் எஸ்.ஐ.  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சென்னை சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெபக்குமார் (வயது 55). இவர், போலீசில் உளவுத்துறை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றவர்.

இவர், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி ராயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஜெபக்குமார், மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபக்குமாரை கைது செய்தனர்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.