பள்ளி வாகனத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை:  72வயது கிளீனர் போக்சோவில் கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோவில்பட்டியில் பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெரு, சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் திருப்பதி (72). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேனில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவிகளை காலையில் ஏற்றி வந்து பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதும், மாலையில் மாணவிகளை ஏற்றி சென்று வீடுபகுதியில் இறக்கி விடுவதும் வாடிக்கை. இந்தவேனில் தினமும் ஏராளமான மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்கின்றனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

திருப்பதி (72)
திருப்பதி (72)

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்தநிலையில், இந்த வேனில் பள்ளிக்கு வந்து செல்லும் 10 வயது மாணவி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களாகவே திருப்பதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதை தொடர்ந்து பெற்றோருடன் சென்று சிறுமி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

 

—   மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.