போலீஸ் குடியிருப்பில் தொடரும் திருட்டு..
போலீஸ் குடியிருப்பில் தொடரும் திருட்டு..
மக்களுக்கு ஒரு பிரச்னைனா போலீஸ் வருவாங்க.. ஆனா போலீஸுக்கே பிரச்னைனா யாருங்க வருவாங்க..என்பதை போன்று தான் ஒரு திகிலான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மலைக்கோட்டை மாவட்டத்தில் 2 எழுத்து பெயர்க் கொண்ட ஏரியாவில், போலீஸாரின் கோட்ரஸ் அமைந்துள்ளது. கடந்து 2 ஆண்டுகளாக தொடர்ந்து டியூட்டிக்கு செல்லும் பெண் காவலர்களின் வீடுகளாக நோட்டமிட்டு ஒரு கும்பல் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி வருகிறதாம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் மேல் புகார் அளித்தும் எந்தவித பயனுமில்லையாம். இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கோட்ரஸில் முப்பெரும் கடவுளின் மனைவியின் பெயரைக் கொண்ட பெண் போலீஸின் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு ஜெயின், நகை திருடு போகியுள்ளதாம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லாததால், சரக மேலதிகாரியிடம் கண்ணீர் விட்டு மனு அளித்துள்ளார். இனியாவது புகாரில் முன்னேற்றம் இருக்குமா.!