நான் விற்கும் சரக்கை ஊத்திக்குடி.!
கண்ணதாசன் காரைக்குடி… நான் விற்கும் சரக்கை ஊத்திக்குடி.!
மலைக்கோட்டை மாநகர எல்லை காவிரி படுகையை ஒட்டியுள்ள கம்பீரமான பகுதியில் கிரகத்தின் பெயரைக் கொண்ட அம்மணி ஒருவர் சந்துக்கடை நடத்தி வருகிறாராம்.
விடியற் காலையில் தொடங்கி விடிய விடிய தனது வீட்டில் வைத்தே மது விற்பனையை ஜோராக நடத்துகிறாராம். அரசாங்கம் நடத்தும் மதுக்கடைக்குதான் ரூல்ஸ்.
எனக்கெல்லாம் கிடையாது என்று தொம்சம் செய்யும் அளவுக்கு அம்மணியின் நடவடிக்கை இருந்து வருகிறதாம்.
இதெல்லாம் தாண்டி சுற்று வட்டாரப்பகுதியில் இருக்கின்ற பள்ளி, கல்லூரி செல்லும் இளசுகளுக்கு எந்நேரமும் சரக்கு கிடைக்கும் ’ஹப்’ ஆக அம்மணியின் வீடு அமைந்துள்ளதாம்.
இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையிடம் பல முறை தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். காரணம், ஜீ – யான காவல் நிலைய போலீஸாருக்கு அவ்வப்போது பூந்திகள் வழங்கி மகிழ்விப்பதால் யாரும் கண்டும் காணாமல் கடந்துப்போகிறார்களாம்.
-ஜித்தன்