தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மிகச்சிறப்பான உத்தரவு…..
தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்கு எண். SA 20168/B/2022 மற்றும் SA 20178/B/2022 ஆணை நாள் 20.09.2024 மக்கள் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்க இயலாது என்று பொதுத்தகவல் அலுவலர் அளித்துள்ள தகவல்களை இவ்வாணையம் ஏற்க இயலாது.
மனுதாரர் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு மனு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டுமென உத்தரவிடுவதுடன் , தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாகவே அவர்கள் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்கள் அறிந்துகொள்ள ஏதுவாகிறது என இவ்வாணையம் தீர்மானித்து உத்தரவு பிறப்பிக்கிறது.