பணி நிறைவு பாராட்டு விழா !
மக்கள் சக்தி இயக்க மாநில பெருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் ரயில்வே பணி நிறைவு பாராட்டு விழா
ரயில்வே பணிமனையில் 27 ஆண்டு பணிபுரிந்து 31.05.25 அன்று பணி நிறைவு முன்னிட்டு பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை மேலாளர் தலைமையில் ரயில்வே திருமண மண்டபம் பகுதியில் மரக்கன்று விழாவும்,
டீசல் பிரிவு பகுதியில் துணை முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர்(டீசல்) சதீஸ் சரவணன் தலைமையில் பணி பாராட்டு விழா நடைப்பெற்றது.
விழாவில் டீசல் பிரிவில் சார்பில் தொழிலாளர்கள் கே.சி.நீலமேகம் அவர்களை பாராட்டி பணி நிறைவு தபால்தலை வெளியிட்டார்கள். மேலும் மாதிரி ரயில் இன்ஜின், பொன்னாடை, போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.
இதில் டீசல் உதவி பணிமனை மேலாளர் துவாரகன், இந்திரகுமார், சங்கர், கருப்பையன், ராஜகோபால், அருணாசலம், காளியப்பன், உத்திரவேல், மகேந்திரன், அழகரிசாமி, பெருமாள், ரகுபதி, சந்திரசேகர், தங்கவேல், பெரியசாமி, மாதவ கிருஷ்ணன், ஜீவானந்தம். வெங்கடேஷ், தயானந்த், மற்றும் 100 மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு பொன்னாடை, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள்.
மேலும் ஆர்மரிகேட் எதிரில் உள்ள காந்தி சிலையிற்கு மாலை அணிவித்தார்.