உலக சுற்றுச்சூழல் தின விழா – *திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு விருது*
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான விழாவில், தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு. எம்.பிரதீப்குமார்,இ.ஆ.ப, அவர்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கான *பசுமை விருதினை* வழங்கி கௌரவித்தார்கள்.
இந்த சிறப்புக்குரிய அங்கீகாரம் நமது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக மேலும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.