போன் எடுக்காத பொறுப்பு அதிகாரி… ஆவணங்களை கிழித்துப்போட்ட டிஎஸ்பி.!
போன் எடுக்காத பொறுப்பு அதிகாரி… காவல் நிலையம் வந்து ஆவணங்களை கிழித்துப்போட்ட டிஎஸ்பி.!
கொங்கு மண்டலத்தில் மூன்றெழுத்துக்கொண்ட மாவட்ட காவல்துறையில் தமிழ்கடவுள் பெயரைக் கொண்டவர் டிஎஸ்பியாக இருந்து வருகிறார்.
இவருடைய சமீபத்திய செயல் காவல் துறை மேல்மட்டத்தை ரொம்ப டிஸ்டர்ப் செய்துள்ளதாம். காரணம், சமீபத்தில் அந்தக் காவல் அதிகாரியின் எல்லையில் கோயில் திருவிழா ஒன்று நடந்தது. அதில், 8 கிராமங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாம்.
திருவிழாவுக்கு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் கலைக் கட்டுமாம். அப்படிப்பட்ட கோயில் திருவிழாவில் முன்விரோதத்தில் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது.
கொலை நடந்தபோது உதயமானவர் ஆய்வாளர் எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் அந்த நேர பாதுகாப்பு அலட்சியம் கொலையில் முடிந்தது.
இதனால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய விஜயமான பொறுப்பு அதிகாரி மறுநாள் கூடுதலாக போலீஸ் போட்டு கவனித்துள்ளார்.
இரவு முழுவதும் டியூட்டி பார்த்துவிட்டு சென்ற அதிகாரி தூங்கிவிட்டு மறுநாள் காலை நிலையம் வர தாமதம் ஆகிவிட்டதாம் .
இதனால் தான் கால் செய்யும்போது போன் எடுக்காத கோபத்தில் ஸ்டேசன் டிஎஸ்ஆரை, சில ஆவணங்களை காவல் நிலையம் வந்து கிளித்துபோட்டுவிட்டாராம் அந்த டிஎஸ்பி.
இந்த தகவல் காவல்துறை மேலிடம் வரை சென்றதால், அதிகாரியின் செயலுக்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறார்களாம்.
– ஸ்பை டீம்