சாராய அதிபர் வீட்டில் சீனியர் அமைச்சர்கள் !
அரசியல் புள்ளிகளை வைத்து தனி ஆட்சி… ராத்திரி உற்சவத்தில் அதிகாரிகள்.!
பிரம்பு மாவட்டத்தில் புதிதாக மதுபான ஆலையை கொண்டு வர சோழ மன்னனின் இஸ்ட தெய்வத்தின் பெயரைக் கொண்ட தொழிலதிபர் முயற்சித்து வருகிறாராம்.
அதற்கான முன்னேற்பாட்டு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம் சர்க்காரில், இது ஒருபக்கம் இருக்க தமிழக அமைச்சரவையில் உள்ள சீனியர் அமைச்சர்கள் அவரது வீட்டையே கெதி என்று கிடைக்கின்றனராம்.
காரணம், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஏற்கனவே பிரபலமான முருகன் கோயில் அமைந்துள்ள நாட்டில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறாராம். அங்கிருந்து ஏற்றுமதியாகி மதுபானங்கள் கடல் கடந்து வருகிறதாம்.
அவை அனைத்தும் அரசியல் புள்ளிகள் நடத்துகின்ற நட்சத்திர ஹோட்டலுக்கு தான் செல்கிறதாம்.
இதனால் தமிழகத்தில் பல அமைச்சர்களை தன் கையில் வைத்துக்கொண்டு தனி ஆட்சியே நடத்தி வருகிறாராம் அந்த தொழிலதிபர்.
அதுமட்டுமல்லாது தொழிலதிபருக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கிறதாம் அங்கு மாதமாதம் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ராத்திரி உற்சவம் நடக்கிறதாம்.
– ஸ்பை டீம்