திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் நேற்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சி.பி.எம் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் சரத்குமார் மீது இந்து முன்னணி குண்டர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனை கண்டித்தும் தாக்குதல் நடத்திய இந்து முன்னணி, பா.ஜ.க காலிகளை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிடைக்க தமிழக அரசை வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக (21.06.2025) மாலை 5 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.
தோழர்களே! ஜனநாயக சக்திகளே!
அணி திரண்டு வாரீர்!!
தோழர்.ஜீவா, மாவட்ட செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்