கொலை மற்றும் வழிப்பறி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, V. துறையுர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இறந்துபோன சேகர் 52/15, த.பெ சின்னதம்பி (வழக்கறிஞர், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆச்சி குமார் என்பவரின் மருமகன் அம்பிகாபதியை கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக 185/14, U/s 147, 148, 341, 294 (b), 324, 302 IPC tau /w 3 of TNPPD Act 1994 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு 25.05.15 அன்று CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.  மேற்படி கொலைக்கு பழிவாங்கும் விதமாக எதிரி 1. குமார் (எ) ஆச்சிகுமார் 48/15 த.பெ ஆச்சிமுத்து, மாரியம்மன் கோவில் தெரு. வி. துறையூர் என்பவர் 4 நபர்களுடன் சேர்ந்து மேற்படி சேகர் என்பவரை கடந்த 16.12.2015 அன்று கொலை செய்துள்ளனர்.

Sri Kumaran Mini HAll Trichy

பால் எமர்சன் பிரசன்னா
பால் எமர்சன் பிரசன்னா

இச்சம்பவம் தொடர்பாக இறந்துபோன சேகர் என்பவரின் மனைவி லதா 52/15 க.பெ சேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரிகள் மீது . 665/15, U/s 147, 148, 120(B), 341, 302 IPC- LIQ வழக்கு பதிவு செய்து, வழக்கில் 13 நபர்கள் எதிரிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்த நிலையில், எதிரி 10 பால் எமர்சன் பிரசன்னா (Splitup case) என்பவரை தவிர, மற்ற எதிரிகளுக்கு ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இந்நிலையில், மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில்  (08.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II)  எதிரி 10 பால் எமர்சன் பிரசன்னா 29/25 த.பெ உபகாரசாமி, மேலபுனவாசல், திருவையாறு என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 10,000/-ம் அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

மேலும், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET பேருந்து நிறுத்தம் அருகே பாதிக்கப்பட்ட ஆரோக்கியம்மாள் 80/23. க.பெ. சின்னப்பன், ஆஞ்சநேயா நகர். MIET, குண்டூர், திருச்சி என்பவர் கடந்த 28.01.2023 அன்று தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்றபோது எதிரி வெங்கடேஷ் 30/25, த.பெ. பாலமுருகன், பங்காரு அடிகளார் நகர், திருவெறும்பூர், இருசக்கர வாகனத்தில் வந்து மேற்படி ஆரோக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக நவல்பட்டு காவல் நிலைய குற்ற எண்.22/2023, u/s 392 IPC ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் (JM-III) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கர் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (08.07.2025) திருச்சி குற்றவியல் நடுவர் எண் III நீதிபதி முகமுது சுகைல். (JM-III) அவர்கள் எதிரி வெங்கடேஷ் 30/25 த.பெ பாலமுருகன் என்பவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய். 5,000-ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேற்படி இருவேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்கள் ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.